ஆப்நகரம்

விமான டிக்கெட் உயரப் போகுது.. ஷாக் நியூஸ்!

விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விமான டிக்கெட் கட்டணம் உயரவிருக்கிறது.

Samayam Tamil 2 Feb 2022, 11:36 am
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் சமையல் எரிவாயு, விமான எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலையை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் பிப்ரவரி 1ஆம் தேதி விமான எரிபொருள் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி தரும் விதமாக, வரலாறு காணாத அளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை நிலவரங்களின்படி, உள்நாட்டு விமானங்களுக்கான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.86,038.2 ஆக உயர்ந்துள்ளது. இது டெல்லி விலை நிலவரமாகும்.
Samayam Tamil ticket


மும்பையில் ரூ.84,505.6 என்ற அளவில் தற்போது விமான எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் என்பது 8.5 சதவீத உயர்வாகும். அதாவது ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.6,743.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு விமான நிறுவனங்கள் அதிருப்தியடைந்துள்ளன. ஏற்கெனவே கொரோனா, ஊரடங்கு பிரச்சினைகளால் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள சூழலில், விமான எரிபொருள் விலையேற்றத்தால் இன்னும் செலவுகள் அதிகரித்து நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

சிலிண்டர் விலை குறைப்பு.. பொதுமக்கள் மகிழ்ச்சி!
இதன் தாக்கத்தைக் குறைக்க விமானப் பயணங்களுக்கான கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய இக்கட்டான சூழலுக்கு விமான நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. விமான டிக்கெட்களுக்கான விலையை உயர்த்துவது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் அதுகுறித்து கோரிக்கை வைக்கப்படும் என்று விமான நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நேற்றைய தினத்தில், விமான நிறுவனங்கள் துறைக்கு நிவாரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும், மாறாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதாகவும், விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்