ஆப்நகரம்

கோதுமை விலை உயர்வு எதிரொலி.. விண்ணை முட்டும் ரொட்டி விலை!

கோதுமை விலையேற்றத்தைத் தொடர்ந்து தற்போது மாவு, ரொட்டி விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 31 Jan 2023, 2:56 pm
இந்தியாவில் கோதுமை என்பது பிரதான உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இந்நிலையில், சமீப காலமாகவே கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கோதுமை மாவு விலை உயர்வை கட்டுக்குள் வைப்பதற்காக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. கோதுமை ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கோதுமை மாவு விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
Samayam Tamil roti


ஆனால் அப்படிச் செய்தும் விலை குறையவே இல்லை. மாறாக, மேலும் உயர்ந்துகொண்டே சென்றது. இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் கோதுமையின் விலை சுமார் 7 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) 2,125 ரூபாயாக நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. ஆனால் தற்போது மொத்த விற்பனைச் சந்தையில் கோதுமை குவிண்டால் ஒன்றுக்கு 3,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூலை மாதங்களில் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி 200 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாகவே கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை உயர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் மாவு விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. ஒரு வருடத்தில் மட்டுமே மாவு விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் ரொட்டி தயாரிப்பில் இதன் தாக்கதால் ரொட்டியின் விலை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

சக்கை போடு போடும் பென்சன் திட்டம்.. ஒரு வருசத்தில் இத்தனை பேரா?
கோதுமை விலை உயர்வு எதிரொலியால் மாவு, ரவை, மைதா ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. வெளி மார்க்கெட்டில் கோதுமையை அரசு ஏலம் விடும் என மில் உரிமையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் இதுவரை அது நடக்கவில்லை. இந்நிலையில், மில் உரிமையாளர்களும் கோதுமையை அதிக விலை கொடுத்து வாங்கத் துவங்கியுள்ளனர். இதனால் மாவு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது அரசு கிடங்குகளில் சுமார் 115 லட்சம் டன் கோதுமை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் தேவையான இருப்பு வரம்பு 74 லட்சம் டன்கள். அப்படிப்பட்ட நிலையில் 41 லட்சம் டன் கோதுமை அதிகமாக உள்ளது. 15 நாட்களில் இந்த கோதுமையை அரசு வெளிச்சந்தையில் விற்றால், கோதுமையின் விலையை நிலைப்படுத்தலாம். மறுபுறம், கோதுமை சந்தைக்கு வரவில்லை என்றால் மாவின் விலை 5 முதல் 6 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் புதிய கோதுமை கையிருப்பு சந்தைக்கு வரும். அதன் பிறகு கோதுமை விலை குறைய வாய்ப்பு உள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்