ஆப்நகரம்

உணவு டெலிவரி தொழிலுக்கு பலத்த அடி... கொரோனாவால் தலைவலி!

கொரோனா ஊரடங்கால் உணவு டெலிவரிக்கான ஆர்டர்கள் 60 விழுக்காடு சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Samayam Tamil 29 May 2020, 6:28 pm
மார்ச் மாதத்தின் முதல் இரண்டு மாதங்களில் இந்தியாவில் உச்சத்தில் இருந்த உணவு டெலிவரி ஆர்டர்கள், அதன்பின்னர் தற்போது வரை 60 விழுக்காடு வீழ்ச்சியை தொட்டுள்ளதாக சூப்பர்ஃப்லை இன்சைட்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பில் விவரங்களை திரட்டி இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil உணவு டெலிவரி


இதுபற்றி கிளவுட் கிட்சன் தொழில் செய்து வரும் ரிபல் ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஜெய்தீப் பர்மன், “உணவு ஆர்டர்களில் தற்போது கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனாவுக்கு முந்தைய நிலை இன்னும் திரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல், தற்போதைய சூழலும் நிலையானதாக இல்லை. நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாகத்தான் தொழில் நடக்கிறது. லக்னோ, போபால், விஜயவாடா, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் தேவை மீண்டும் அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே உணவகங்கள் மட்டுமல்லாமல் ஸ்விகி, ஜொமாட்டோ போன்ற உணவு டெலிவரி தளங்களிலும் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பெஹ்ரூஸ் பிரியாணி, ஓவன்ஸ்டோரி, ஃபாசோஸ் போன்ற கிளவுட் கிட்சன்களை ரிபல் ஃபுட்ஸ் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்திடம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களில் 75 விழுக்காட்டினர், சமைப்பவர்களின் மருத்துவ சான்றிதழ், உடல் வெப்பநிலை உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

ஸ்விகி, ஜொமாட்டோ நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றுவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன. மேலும், உணவு மட்டுமல்லாமல் மளிகைப் பொருட்களையும் டெலிவரி செய்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. குறைந்தது ஆறு மாதங்களுக்கு பிறகே நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி தீபேந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்