ஆப்நகரம்

இனி சாப்பாட்டுக்கும் அதிகம் செலவாகும்!

சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியால் உணவு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Apr 2022, 4:24 pm
ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் இந்தியாவில் சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதியில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலை 250 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த விலையேற்றம் பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
Samayam Tamil food


சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியால் தமிழகத்தில் டீ, காபி விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. டீ விலை 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும், காபி விலை 12 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. சிலிண்டர் விலை மட்டுமல்லாமல், பால் விலை உயர்வாலும் டீ, காபி விலையை உயர்த்த வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டதாக டீ கடைகாரர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களின் பாக்கெட்டை காலி செய்யும் வகையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் உணவு விலையும் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு நாடு முழுவதும் அமல்படுத்தப்படவிட்டாலும், போபாலில் விலையேற்றம் தொடங்கியுள்ளது.

டீ பிரியர்களுக்கு ஷாக்... சென்னையில் அதிரடி விலை உயர்வு!
இதுகுறித்து உணவகம் ஒன்றின் உரிமையாளரான ஜகதீஷ் நிகம் கூறுகையில், “சிலிண்டர் விலை 250 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளன. போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பால் உணவகங்களில் சாப்பாடு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி கிட்சன் சார்ந்த நிறைய விஷயங்களில் விலை உயர்வு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு அதற்கு ஏற்ப மெனு கார்டுகளும் தயாரித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வீட்டில் சிலிண்டர் மட்டுமல்லாமல், கடைகளில் டீ - காபி, உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் வாங்கும் சம்பளத்தில் குடும்ப செலவுகளைச் சமாளிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்