ஆப்நகரம்

இந்தியாவில் ரூ.43838 கோடி வெளிநாட்டு முதலீடு.. 9 மாத உச்சம்!

இந்திய பங்கு சந்தையில் மே மாதம் குவிந்த 43838 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 4 Jun 2023, 4:53 pm
கடந்த மே மாதத்தில் இந்தியாவில் 43,838 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. இது ஒன்பது மாத உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil fpi
fpi


FPI முதலீடுகள்

FPI என்றால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள். இவ்வகையிலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு சந்தை வாயிலாக இந்தியாவில் முதலீடு செய்கின்றனர். தனிநபர் முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் இரு தரப்பினருமே வெளிநாட்டு முதலீட்டாளர்களில் அடங்குவர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் இந்தியாவில் 43,838 கோடி ரூபாய் முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளனர். இது கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத உச்சமாகும்.

மே மாதத்தை தொடர்ந்து ஜூன் மாதத்தின் தொடக்கத்திலும் இந்திய பங்கு சந்தையில் நிறைய முதலீடுகள் குவிந்துள்ளன. ஜூன் தொடங்கி இரண்டு நாட்களிலேயே இந்திய பங்கு சந்தையில் 6,490 கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்துள்ளன.

மே மாதத்துக்கு முன்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் இந்திய பங்கு சந்தையில் 51,204 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை அந்நிய முதலீட்டாளர்கள் குவித்தனர்.

மே மாதத்துக்கு முந்தைய மாதங்களான ஏப்ரல் மாதத்தில் 11,630 கோடி ரூபாயும், மார்ச் மாதத்தில் 7,936 கோடி ரூபாயும் இந்திய பங்கு சந்தையில் முதலீடுகள் குவிந்துள்ளன.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்திய பங்கு சந்தையில் இருந்து 34,000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்