ஆப்நகரம்

கடன்பத்திர வெளியீடு மூலமாக ரூ.1,900 கோடி நிதி திரட்டல்

2016-17ம் நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில், 4 நிறுவனங்கள் மட்டுமே கடன்பத்திர வெளியீடை மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.1,900 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

TNN 21 Jun 2016, 5:01 pm
2016-17ம் நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில், 4 நிறுவனங்கள் மட்டுமே கடன்பத்திர வெளியீடை மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.1,900 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil four cos garner rs 1900 crore via ncds in april may
கடன்பத்திர வெளியீடு மூலமாக ரூ.1,900 கோடி நிதி திரட்டல்


முந்தைய நிதியாண்டின் முடிவில், இந்திய அளவில் நிறுவனங்கள் மேற்கொண்ட கடன்பத்திர வெளியீட்டின் மதிப்பு ரூ.33,812 கோடியாக இருந்தது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களான ஏப்ரல் மற்றும் மே முடிவில், நிறுவனங்கள் மேற்கொண்ட கடன்பத்திர வெளியீட்டின் மதிப்பு ரூ.1,900 கோடியாக உள்ளதென்று, செபி தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு காலத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்சியல் சர்வீஸ், முத்துட் ஃபைனான்ஸ், ஷக்தி ஃபைனான்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் மட்டுமே, கடன்பத்திர வெளியீடை மேற்கொண்டுள்ளதாகவும், செபி கூறியுள்ளது. எனினும், வரும் நாட்களில் கடன்பத்திர வெளியீட்டின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் செபி குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்