பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சி செய்து தரவரிசை பட்டியலை வெளியிடும் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை, சமீபத்தில் உலகின் சக்தி வாய்ந்த டாப்-100 பெண்களின் பட்டியலை வெளியிட்டது.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகம், சமூக சேவை, அரசியல், ஊடகம் என பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்பில் உள்ள பெண்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த பெண்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் இந்த பட்டியலில்,நான்கு இந்திய பெண்கள் இடம்பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தியா ஊடகத்துறையில் மிக முக்கிய இடம் பெற்றுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவன தலைவர் ஷோபனா பாத்தியா 93-ஆவது இடத்தை தன்வசமாக்கியுள்ளார்.
உயிரி
மருந்துப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரண் மசும்தார் ஷா, இந்த பட்டியலில் 77-ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐ.சி.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சார் 40-ஆவது இடம் வகிக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அருந்ததி பட்டாச்சார்யா 25-ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் டாப்-25 வரிசையில் இடம் பெற்ற ஒரே இந்தியப் பெண் பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்திரா நூயி ஆவார்.இந்தியாவில் பிறந்த அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள இவர்,ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் அடிக்கடி இடம் பெற்று வருகிறார் .
வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த பெண்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் இந்த பட்டியலில்,நான்கு இந்திய பெண்கள் இடம்பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தியா ஊடகத்துறையில் மிக முக்கிய இடம் பெற்றுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவன தலைவர் ஷோபனா பாத்தியா 93-ஆவது இடத்தை தன்வசமாக்கியுள்ளார்.
உயிரி
மருந்துப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரண் மசும்தார் ஷா, இந்த பட்டியலில் 77-ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐ.சி.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சார் 40-ஆவது இடம் வகிக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அருந்ததி பட்டாச்சார்யா 25-ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் டாப்-25 வரிசையில் இடம் பெற்ற ஒரே இந்தியப் பெண் பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்திரா நூயி ஆவார்.இந்தியாவில் பிறந்த அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள இவர்,ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் அடிக்கடி இடம் பெற்று வருகிறார் .