ஆப்நகரம்

ரூ.6,200 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்!

கடந்த வார வர்த்தகத்தில், இந்திய கடன்பத்திர சந்தையில் இருந்து ரூ.6,200 கோடி முதலீடை, அந்நிய முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

TNN 26 Jun 2016, 4:58 pm
கடந்த வார வர்த்தகத்தில், இந்திய கடன்பத்திர சந்தையில் இருந்து ரூ.6,200 கோடி முதலீடை, அந்நிய முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
Samayam Tamil fpis pull out rs 6200 cr from debt markets in june
ரூ.6,200 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்!


சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதார காரணிகளுக்கு ஏற்ப, அந்நிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச்சந்தைகள், கடன்பத்திர சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்துவருகின்றன. இதன்படி, கடந்த வாரத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதாக, இங்கிலாந்து அறிவித்ததை தொடர்ந்து, இந்திய கடன்பத்திர சந்தையில் முதலீடு பாதித்தது.

இதனால், ஜூன் மாதத்தின் 1ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரையான காலத்தில் இந்திய கடன்பத்திர சந்தையில் இருந்து, ரூ.6,200 கோடி அந்நிய முதலீடு வெளியே எடுக்கப்பட்டது. இதற்கு முந்தைய மே மாதத்தில் ரூ.4,409 கோடி ரூபாய் முதலீடை கடன்பத்திர சந்தையில் இருந்து அவர்கள் வெளியே எடுத்திருந்தனர்.

அதேசமயம், ஜூன் மாதத்தின் இதுவரையான காலத்தில் பங்குச்சந்தைகளில் நடைபெற்ற அந்நிய முதலீடு ரூ.4,429 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்