ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் ரூ.8,127 கோடி அந்நிய முதலீடு ஈர்ப்பு

ஆகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலத்தில், இந்திய பங்குச்சந்தைகளில் ரூ.8,127 கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

TNN 28 Aug 2016, 11:38 pm
ஆகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலத்தில், இந்திய பங்குச்சந்தைகளில் ரூ.8,127 கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
Samayam Tamil fpis stay bullish pour rs 8127 cr in equities in aug
பங்குச்சந்தைகளில் ரூ.8,127 கோடி அந்நிய முதலீடு ஈர்ப்பு


இந்திய கடன்பத்திர சந்தை மற்றும் பங்குச்சந்தைகளில், சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதார காரணங்களுக்கு ஏற்ப, அந்நிய முதலீட்டாளர்கள், முதலீடை அதிகரித்தும், குறைத்தும் வருகின்றனர். இதன்படி, ஆகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலத்தில், மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் நடைபெற்ற அந்நிய முதலீட்டின் மதிப்பு ரூ.8,127 கோடியாக உள்ளதென்று, செபி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில், பங்குச்சந்தைகளில் ரூ.12,612 கோடி அந்நிய முதலீடு செய்யப்பட்டிருந்தது. உள்நாட்டில், ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, அந்நிய முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ள காரணத்தால், பங்குச்சந்தைகளில் அவர்கள் முதலீடை அதிகரித்து வருவதாக, செபி தெரிவித்துள்ளது.

அதேசமயம், மதிப்பீட்டு காலத்தில் கடன்பத்திர சந்தையில் இருந்து ரூ.2,727 கோடி முதலீடை, அந்நிய முதலீட்டாளர்கள் வெளியே எடுத்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்