ஆப்நகரம்

அடி தூள்.. விமான டிக்கெட் முற்றிலும் இலவசம்.. சூப்பரான சலுகை அறிவிப்பு!

பணமே செலுத்தாமல் இலவசமாகப் பயணிக்கும் சிறப்புச் சலுகையை கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 11 Apr 2023, 11:29 am
விமான டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான GoFirst உங்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதில் பயணிகள் இலவசமாக விமானத்தில் பறப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. GoFirst நிறுவனம் தனது 17வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. அதை முன்னிட்டு, தனது பயணிகளுக்கு இரண்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த சிறப்புச் சலுகைகள் என்ன என்பதையும், பயணிகள் அவற்றை எவ்வாறு பெறலாம் என்பதையும் இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil flight ticket


இவர்களுக்கு மட்டும் இலவசம்!

GoFirst நிறுவனம் தனது 17வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 17 வயது பயணிகளுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குகிறது. இந்தச் சலுகை 2023 நவம்பர் 4 வரையிலான விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சலுகையைப் பெறுவதற்கு, 2022 டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, 17 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, அவர்கள் ஆதார், பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணத்தை வழங்க வேண்டும்.

முன்பதிவு செய்வது எப்படி?

பயணிகள் இந்த இலவச சலுகையைப் பெற விரும்பினால், GoFirst இணையதளத்திற்குச் சென்று 'Manage Booking' என்ற பிரிவில் அவரது கடைசி விமானத்தின் PNR நம்பரை உள்ளிட வேண்டும். இலவச வவுச்சரை உருவாக்க, ’Get Voucher' என்பதைக் கிளிக் செய்யவும். இந்த ஆப்சன் தகுதியான பயணிகளுக்கு மட்டுமே தெரியும். அதன் பிறகு அவர்கள் படிவத்தை பூர்த்தி செய்து சரியான ஆதார் அட்டை/பாஸ்போர்ட் ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். படிவம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டதும், வவுச்சர் 72 மணி நேரத்திற்குள் பயணிகளின் மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும்.

தள்ளுபடி கிடைக்கும்!


இந்த சிறப்பு சலுகை மட்டுமல்லாமல் GoFirst அதன் அனைத்து பயணிகளுக்கும் விமான டிக்கெட்டுகளில் சிறப்பு சலுகைகளை கொண்டு வந்துள்ளது. GoFirst விமான டிக்கெட்டுகளில் பயணிகளுக்கு 17 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்கு, அவர்கள் GOING17 என்ற விளம்பரக் குறியீட்டை உள்ளிட வேண்டும். பயணிகளுக்கான இந்த சலுகை 2023 நவம்பர் 4ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள் இச்சலுகையைப் பெற தங்கள் பயணத் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்