ஆப்நகரம்

மும்பையில் வீடு..கோடிகளில் பணப் பலன்.. சந்தா கோச்சார் கைது பின்னணி!

மும்பையில் வீடு பெற்றது முதல் பணப் பலன்களை பெற்றது வரை - சந்தா கோச்சார் கைதின் பின்னணி.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 25 Dec 2022, 1:00 pm
ஐசிஐசிஐ வங்கி - வீடியோகான் கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரும், அவரது கணவர் தீபக் கோச்சாரும் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த மோசடியால் சந்தா கோச்சார் நிறைய பணப் பலன் பெற்றது மட்டுமல்லாமல் மும்பையில் ஒரு வீடு வாங்கியுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
Samayam Tamil Chanda Kochhar
சந்தா கோச்சார்


இவ்விவகாரத்தில் நாளை (டிசம்பர் 26) வரை சிபிஐ காவலில் சந்தா கோச்சாரையும், தீபக் கோச்சாரையும் வைத்து விசாரிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கடன் மோசடியால் ஐசிஐசிஐ வங்கிக்கு 1730 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பி வழக்கறிஞர், “ஐசிஐசிஐ தலைமை பதவிக்கு சந்தா கோச்சார் வந்தபோது வீடியோகானின் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆறு கடன்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் இரு கடன்களுக்கு சந்தா கோச்சார் உறுப்பினராக இருந்த குழுக்களால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரப்போகும் புது பெட்ரோல்.. அடுத்த பிளான் இதுதான்!
வீடியோகான் குழுமத்துக்கு கடன் வழங்கும்படி மற்ற குழுக்களிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் சாந்தா கோச்சார். 2009ஆம் ஆண்டில் நுபவர் நிறுவனத்துக்கு வீடியோகான் குழுமம் 64 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. இந்த நுபவர் தீபக் கோச்சாரின் நிறுவனம்.

மும்பையில் சந்தா கோச்சார் வசித்து வந்த வீடும் தீபக் கோச்சாரின் குடும்ப அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வீட்டின் மதிப்பு 1996ஆம் ஆண்டிலேயே 5.25 கோடி ரூபாய். ஆனால் 2016ஆம் ஆண்டில் வெறும் 11 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இதெல்லாம் தவறாக பெறப்பட்ட பணம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழுமத்தின் வேணுகோபால் தூட் ஆகியோர் மீது 2019ஆம் ஆண்டில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சாந்தா கோச்சாரும் அவரது கணவர் தீபக் கோச்சாரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்