ஆப்நகரம்

அப்பளம் முதல் சாக்லெட் வரை.. 143 பொருட்களுக்கு ஜிஎஸ்டியை உயர்த்த அரசு திட்டம்!

அப்பளம், சாக்லெட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு ஜிஎஸ்டியை உயர்த்துவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் திட்டம்.

Samayam Tamil 24 Apr 2022, 10:58 am
சுமார் 143 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் உணவு சார்ந்த சில பொருட்களுக்கும் ஜிஎஸ்டியை உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. 143 பொருட்களுக்கு ஜிஎஸ்டியை உயர்த்துவது குறித்து மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து கேட்டுள்ளது.
Samayam Tamil nirmala sitharaman


தற்போது 18% ஜிஎஸ்டி விகிதாச்சாரத்தில் உள்ள 92% பொருட்களை 28% விகிதாச்சாரத்துக்கு மாற்றுவதற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதனால் சில அத்தியாவசியப் பொருட்கள் முதல் பல்வேறு சரக்குகள் மீதான ஜிஎஸ்டி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் வரிக் குறைப்பு செய்யப்பட்ட பொருட்களுக்கு தற்போது வரியை உயர்த்த அரசு திட்டமிட்டு வருகிறது.

ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. ஃப்ரஷர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!
என்னென்ன பொருட்களுக்கு வரி உயர்வு?

அப்பளவும், வெல்லம், சாக்லெட், வால்நட் கஸ்டர்ட் பவுடர், சிவிங் கம், மது சாராத பானங்கள், வாஷ்பேசின், செராமிக் சிங்க், கண்ணாடி, கண்ணாடி ஃபிரேம், ஆடைகள், லெதர் உப பொருட்கள், சூட்கேஸ், பவர் பேங்க், கலர் டிவி உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டியை உயர்த்த அரசு பரிசீலித்துள்ளது.

மேலும் லெதர் ஆடைகள், பெர்ஃபியூம், ரேசர், வாட்ச், சாக்லெட், வாஃபில், காபி கான்செண்ட்ரேட், ஹேண்ட்பேக், ஷாப்பிங் பேக், செராமிக் சிங்க், பிளைவுட், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை 18 விழுக்காட்டில் இருந்து 28 விழுக்காடாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோக வால்நட் மீதான ஜிஎஸ்டி 5 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடாகவும், கஸ்டர்ட் பவுடர் மீதான ஜிஎஸ்டி 5 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தப்படலாம். ஜிஎஸ்டி உயர்த்துவது குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்