ஆப்நகரம்

ஜனவரி முதல் எல்லாம் மாறப் போகுது.. பொதுமக்கள் கவனத்துக்கு!!

சிலிண்டர் விலை குறையுமா, குறையாதா?

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 30 Dec 2022, 8:07 am
இலவச ரேஷன் திட்டம் முதல் சிலிண்டர் விலை வரை பணம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் மாறவிருக்கின்றன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil from bank locker to credit card these rules are going to change from 2023 january month
ஜனவரி முதல் எல்லாம் மாறப் போகுது.. பொதுமக்கள் கவனத்துக்கு!!


​புத்தாண்டில் செலவு!

இன்னும் சில நாட்களில் புத்தான்டு தொடங்கப் போகிறது. இந்தப் புதிய ஆண்டு பல மாற்றங்களுடன் தொடங்கவிருக்கிறது. வங்கி லாக்கர், கிரெடிட் கார்டு, மொபைல் தொடர்பான பல விதிகளில் மாற்றம் இருக்கும். இதனுடன் கேஸ் சிலிண்டர் விலையும், வாகனங்களின் விலையும் உயரலாம். இந்த மாற்றங்கள் அனைத்தும் உங்கள் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும். ஜனவரி 1 முதல் என்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

​சிலிண்டர் விலை!

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலை (Lpg price) நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்துக்கான சிலிண்டர் விலை 1ஆம் தேதி நிர்ணயம் செய்யப்படும். கடந்த சில மாதங்களில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்த மாதமாவது விலை குறையுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கார் விலை!

புத்தாண்டு முதல் வாகனங்களின் விலை உயரவிருக்கிறது. மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார், டாடா மோட்டார்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி கார், ரெனால்ட், கியா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் ஆகியவை ஜனவரி 1 முதல் வாகன விலையை உயர்த்துகின்றன.

​வங்கி லாக்கர்!

ஜனவரி 1 முதல் ரிசர்வ் வங்கி லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வெளியிடும். அதில் வாடிக்கையாளர்கள் கையெழுத்திட வேண்டும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, தங்கள் லாக்கர் ஒப்பந்தத்தில் ஏதேனும் நியாயமற்ற நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளதா என்பதை வங்கிகள் முடிவு செய்யும்.

​கிரெடிட் கார்டு!

வங்கிகளின் கடன் அட்டைகள் தொடர்பான விதிகளில் ஜனவரி 1 முதல் மாற்றம் இருக்கும். HDFC வங்கி பணம் எடுப்பதற்கான கட்டணங்களை மாற்றப் போகிறது. இது தவிர, சில கார்டுகளின் விதிமுறைகளை மாற்றவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

​ஜிஎஸ்டி!

ஜனவரி 1 முதல் ஜிஎஸ்டி விதிகளிலும் மாற்றம் செய்யப்படும். 5 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ள வணிகர்கள் மின் விலைப்பட்டியல்களை உருவாக்குவது இப்போது அவசியமாகிறது.

​மொபைல்!

ஒவ்வொரு தொலைபேசி உற்பத்தியாளர் மற்றும் அதன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு தொலைபேசியின் IMEI எண்ணைப் பதிவு செய்வது அவசியமாகும்.

​இலவச ரேஷன்!

கொரோனா சமயத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் உதவுவதற்காக கரீப் கல்யாண யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இத்திட்டம் அடிக்கடி நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், கடைசியாக வெளியான அறிவிப்பில் 2022 டிசம்பர் 31 வரை மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவர் 1 முதல் டிசம்பர் 31 வரை இத்திட்டம் நீடிக்கும்.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்