ஆப்நகரம்

பென்சன் உயர்வு.. வேலை இல்லாதவர்களுக்கு ரூ.2500 உதவித்தொகை.. சத்தீஸ்கர் பட்ஜெட் ஹைலைட்ஸ்!

சத்தீஸ்கர் மாநில பட்ஜெட் அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பென்சன் உயர்வு, வேலை இல்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 6 Mar 2023, 6:08 pm
சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் இன்று 2023-24ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் (Chhattisgarh Budget) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் (Bhupesh Baghel) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
Samayam Tamil bhupesh baghel
bhupesh baghel


இந்த பட்ஜெட்டில், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை, பென்சன் தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் வெளியிட்டுள்ளார். இந்தாண்டு சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழலில் இந்த மாநில பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநில பட்ஜெட் ஹைலைட்ஸ்:

  • ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்த 18 முதல் 35 வயது வரையிலான வேலை இல்லாத இளைஞர்களுக்கு நவீன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் 2,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

  • சமாஜிக் சுரக்‌ஷா பென்சன் திட்டத்தின் கீழ் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பென்சன் தொகை 300 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • கன்னிய விவாக யோஜனா திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

  • அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் 6,500 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் 3,250 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • ராய்பூரில் உள்ள அம்பேத்கர் நினைவு மருத்துவமனையில் 700 படுக்கை வசதி கொண்ட ஒருங்கிணைந்த மருத்துவமனை கட்டிடத்தை மேம்படுத்த 85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • தொலைதூர கிராமங்களிலும் நடமாடும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • ராய்பூரில் இருந்து துர்க் பகுதிக்கு லைட் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும்.

  • புதிதாக 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

  • 25 கோடி ரூபாய் செலவில் கோர்பாவில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.

  • பத்திரிகையாளர்கள் பெற்ற 25 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி மானியம் வழங்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்