ஆப்நகரம்

மரத்தடியில் படித்து.. இன்று அமெரிக்க பணக்காரர்களில் ஒருவராக கலக்கும் இந்தியர்!

இந்தியாவில் ஒரு கிராமத்தில் பிறந்து இன்று அமெரிக்காவின் பணக்கார இந்தியர்களில் ஒருவராக இருக்கும் ஜே சவுத்ரி பற்றிய வெற்றிக் கதையை இங்குக் காணலாம்.

Samayam Tamil 8 Apr 2023, 5:08 pm
சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Zscaler CEO மற்றும் நிறுவனரான ஜே சவுத்ரி 5.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் அமெரிக்காவில் உள்ள பணக்கார இந்தியர்களில் ஒருவர். ஜே சவுத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் இடம் பெற்றுள்ளனர்.
Samayam Tamil J Chaudry


62 வயதான ஜெய் சௌத்ரி, ஹிமாச்சல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். கிராமத்திற்கு முறையாக மின்சாரம் வழங்கப்படாததால், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஜெய் சௌத்ரியின் பெற்றோர் விவசாயிகள், சிறுவயதில் மரத்தடியில் படித்து வந்துள்ளார்.

மேலும் அவர் உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல தினமும் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லுவார் என ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் பள்ளியில் ஒரு சிறந்த மாணவராகவும் இருந்துள்ளார்.

பள்ளிப் படைப்பை முடித்தவுடன், அவர் வாரணாசியில் உள்ள பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஐஐடியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். மேலும் அங்கு BTech முடித்த பிறகு, சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் மேலாண்மை முதுகலை படிப்பைத் தொடர அமெரிக்கா சென்றுள்ளார்.

ஜே சௌத்ரி 1996 ஆம் ஆண்டில் SecureIT ஐ சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு பல ஆண்டுகளுக்கு மேலாக IBM, Unisys மற்றும் IQ மென்பொருள் போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

ZScaler க்கு முன், கோர்ஹார்பர், செக்யூர் ஐடி, சைபர் டிரஸ்ட் மற்றும் ஏர் டிஃபென்ஸ் உட்ப்ட பல நிறுவனங்களையும் அவர் நிறுவியுள்ளார்.

2008 ஆம் ஆண்டில், ஜே சௌத்ரி Zscaler எனும் சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனம் தற்போது 5,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் 2,600 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

நாஸ்டாக்-பட்டியலிடப்பட்ட Zscaler நிறுவனத்தில் 45% பங்குகளை ஜே சவுத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் வைத்துள்ளனர். Zscaler இன் மதிப்பு சுமார் 15 பில்லியன் டாலராக உள்ளது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்