இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை நீட்டிக்க பல்வேறு மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதையொட்டி மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கி இருப்பதால் எரிபொருள் தேவை பெரிதும் குறைந்துள்ளது.
நடப்பு மாதத்தில் தற்போது வரை பெட்ரோல், டீசல் தேவை 66 சதவீதம் குறைந்திருக்கிறது. விமான எரிபொருள் பயன்பாடு 90 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. ஏனெனில் பெரும்பாலான விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வர்த்தக ரீதியாக சில விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டின் இதே காலகட்டமான ஏப்ரல் 2019ல் 2.4 மில்லியன் டன் பெட்ரோல் மற்றும் 7.3 மில்லியன் டன் டீசலை இந்தியா பயன்படுத்தியுள்ளது.
பெட்ரோல் விலை: சடன் பிரேக் போட்டு அப்படியே நிற்கும் விலை!
விமான எரிபொருளை 6,45,000 டன் அளவிற்கு பயன்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் எரிபொருள் பயன்பாட்டில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக திகழும் இந்தியா கொரோனா தொடர்பான ஊரடங்கால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவை மார்ச் 2020ல் சந்தித்திருக்கிறது. கடந்த மாதம் நாட்டின் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு ஒட்டுமொத்தமாக 16.08 மில்லியனாக(17.79% சரிவு) குறைந்துள்ளது.
இந்தியாவில் டீசல் பயன்பாடு அதிகம். இது 5.6 மில்லியன் டன்னாக(24.23% சரிவு) குறைந்துள்ளது. இது வரலாறு காணாத அளவில் மிகக் குறைந்த பயன்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் பெட்ரோல் விற்பனை 16.37 சதவீதமாக, அதாவது 2.15 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதேபோல் மார்ச் மாதத்தின் மத்தியில் விமான எரிபொருள் பயன்பாடு 32.4 சதவீதம், அதாவது 4,84,000 டன்னாக குறைந்துள்ளது.
அதேசமயம் எல்.பி.ஜி தேவை அதிகரித்துள்ளது. ஏனெனில் அனைவரும் வீடுகளில் முடங்கி இருப்பதால் சமையல் பயன்பாட்டிற்காக கேஸ் சிலிண்டர்களை அதிகளவில் முன்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி எல்.பி.ஜியின் விற்பனை 1.9 சதவீதம், அதாவது 2.3 மில்லியன் டன்னாக கடந்த மார்ச்சில் அதிகரித்துள்ளது. நடப்பு மாதத்தில் தற்போது வரை எல்.பி.ஜியின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை: என்னம்மா இப்படி பண்றீங்களேமா!
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் எரிபொருட்களின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு மாதத்தில் தற்போது வரை பெட்ரோல், டீசல் தேவை 66 சதவீதம் குறைந்திருக்கிறது. விமான எரிபொருள் பயன்பாடு 90 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. ஏனெனில் பெரும்பாலான விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வர்த்தக ரீதியாக சில விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டின் இதே காலகட்டமான ஏப்ரல் 2019ல் 2.4 மில்லியன் டன் பெட்ரோல் மற்றும் 7.3 மில்லியன் டன் டீசலை இந்தியா பயன்படுத்தியுள்ளது.
பெட்ரோல் விலை: சடன் பிரேக் போட்டு அப்படியே நிற்கும் விலை!
விமான எரிபொருளை 6,45,000 டன் அளவிற்கு பயன்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் எரிபொருள் பயன்பாட்டில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக திகழும் இந்தியா கொரோனா தொடர்பான ஊரடங்கால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவை மார்ச் 2020ல் சந்தித்திருக்கிறது. கடந்த மாதம் நாட்டின் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு ஒட்டுமொத்தமாக 16.08 மில்லியனாக(17.79% சரிவு) குறைந்துள்ளது.
இந்தியாவில் டீசல் பயன்பாடு அதிகம். இது 5.6 மில்லியன் டன்னாக(24.23% சரிவு) குறைந்துள்ளது. இது வரலாறு காணாத அளவில் மிகக் குறைந்த பயன்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் பெட்ரோல் விற்பனை 16.37 சதவீதமாக, அதாவது 2.15 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதேபோல் மார்ச் மாதத்தின் மத்தியில் விமான எரிபொருள் பயன்பாடு 32.4 சதவீதம், அதாவது 4,84,000 டன்னாக குறைந்துள்ளது.
அதேசமயம் எல்.பி.ஜி தேவை அதிகரித்துள்ளது. ஏனெனில் அனைவரும் வீடுகளில் முடங்கி இருப்பதால் சமையல் பயன்பாட்டிற்காக கேஸ் சிலிண்டர்களை அதிகளவில் முன்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி எல்.பி.ஜியின் விற்பனை 1.9 சதவீதம், அதாவது 2.3 மில்லியன் டன்னாக கடந்த மார்ச்சில் அதிகரித்துள்ளது. நடப்பு மாதத்தில் தற்போது வரை எல்.பி.ஜியின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை: என்னம்மா இப்படி பண்றீங்களேமா!
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் எரிபொருட்களின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.