ஆப்நகரம்

கொரோனா படுத்தும் பாடு... பெட்ரோல் விற்பனை வீழ்ச்சி!

கொரோனா எதிரொலியால் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு 9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Samayam Tamil 12 May 2021, 8:18 pm
இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தும் சில இடங்களில் முடங்கியுள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் அலுவலகத்துக்குச் செல்வதும் குறைந்துள்ளது. உற்பத்தி நிறுவனங்களும் பல இடங்களில் மூடப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களால் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்துள்ளது. சமையல் எரிவாயு தவிர மற்ற எரிபொருள் தேவையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil petrol sales


அரசு தரப்பு அறிக்கையின்படி, சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் தேவை 9.4 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதாவது ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 17.01 மில்லியன் டன் அளவிலான எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் மாதத்தில் எரிபொருள் விற்பனை 18.77 மில்லியன் டன்னாக இருந்தது. மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலியம் பகுப்பாய்வு மற்றும் திட்டமிடல் அமைப்பு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் பயன்பாட்டில் வீழ்ச்சி காணப்பட்டாலும் 2020 ஏப்ரல் மாதத்தை விட இப்போது 81.5 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையைப் பொறுத்தவரையில், ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 2.38 மில்லியன் டன் அளவு பெட்ரோல் விற்பனையாகியுள்ளது. 2020 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு இது மிகப் பெரிய வீழ்ச்சியாகும். 2021 ஏப்ரல் மாத பெட்ரோல் விற்பனையானது 2021 மார்ச் மாதத்தை விட 3 சதவீதமும், 2020 ஏப்ரல் மாதத்தை விட 3 சதவீதமும் குறைவாகும். 2020 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 9,72,000 டன் பெட்ரோல் விற்பனையாகியிருந்தது.

50 ரூபாயை வைத்து நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!

டீசல் விற்பனையில் 7.5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 6.67 மில்லியன் டன் டீசல் மட்டுமே விற்பனையாகியுள்ளது. 2020 ஏப்ரல் மாதத்தில் டீசல் விற்பனை அளவு 3.25 மில்லியன் டன்னாக இருந்தது. விமான எரிபொருள் விற்பனையிலும் ஏப்ரல் மாதத்தில் 14 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டு 4,09,000 டன் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விற்பனை 6.4 சதவீதம் குறைந்து 2.1 மில்லியன் டன்னாக இருந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்