ஆப்நகரம்

பெட்ரோல் விற்பனை மீண்டும் உயர்வு!

இந்தியாவில் எரிபொருள் தேவை தொடர்ந்து நான்காவது மாதமாக அதிகரித்துள்ளது.

Samayam Tamil 9 Jan 2021, 3:54 pm
2020 டிசம்பர் மாதத்துக்கான எரிபொருள் பயன்பாடு குறித்த விவரங்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் மொத்தம் 18.6 மில்லியன் டன் அளவு எரிபொருள் நுகரப்பட்டுள்ளது. இது 2020 நவம்பர் மாத அளவை (17.87 மில்லியன் டன்) விட 4.1 சதவீதம் அதிகமாகும். 2020ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துக்குப் பிறகு எரிபொருள் தேவை இந்த டிசம்பரில்தான் மிக அதிகமாக இருந்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் பார்த்தால் 2019 டிசம்பர் மாத அளவை விட 1.8 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
Samayam Tamil petrol sales


டீசல் விற்பனையைப் பொறுத்தவரையில், நவம்பர் மாதத்தை விட 1.9 சதவீதம் உயர்ந்து மொத்தம் 7.18 மில்லியன் டன் அளவு டீசல் விற்பனையாகியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் பயன்பாட்டில் டீசலின் பங்கு 40 சதவீதமாக இருக்கிறது. 2019 டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 2.8 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனை 1.5 சதவீதம் உயர்ந்து 2.7 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. சமையல் எரிவாயு விற்பனை 7 சதவீதம் உயர்ந்து 2.53 மில்லியன் டன்னாக இருந்தது. நாப்தா விற்பனை 2.4 சதவீதம் உயர்ந்து 1.24 மில்லியன் டன்னாக உள்ளது.

சிலிண்டர் புக்கிங்... ரூ.500 தள்ளுபடி பெறுவது எப்படி?

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு வாகனப் போக்குவரத்தும் முடங்கியதால் பெட்ரோல் நிலையங்களில் விற்பனை பாதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிய சூழலிலும் பெட்ரோல், டீசல் விற்பனை கொரோனாவுக்கு முந்தைய அளவை எட்டவில்லை. அக்டோபர் மாதத்தில் ஓரளவுக்கு விற்பனை சிறப்பாக இருந்த நிலையில் நவம்பர் மாத மத்தியில் மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும், மாத இறுதியிலும், டிசம்பர் மாதத்திலும் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்