ஆப்நகரம்

பெட்ரோல் விற்பனை சரிவு... எல்லாம் கொரோனா மாயம்!

கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

Samayam Tamil 10 Jun 2021, 9:37 pm
இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொதுப் போக்குவரத்தும் சில இடங்களில் முடங்கியுள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் அலுவலகத்துக்குச் செல்வதும் குறைந்துள்ளது. உற்பத்தி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களால்
Samayam Tamil fuel demand

பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்துள்ளது. சமையல் எரிவாயு தவிர மற்ற எரிபொருள் தேவையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அரசு தரப்பு அறிக்கையின்படி, சென்ற மே மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் தேவை 11.3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. மே மாதத்தில் மொத்தம் 15.11 மில்லியன் டன் அளவு எரிபொருள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2020 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு இந்தியா சந்திக்கும் மிக மோசமான நிலையாகும். 2020 மே மாதத்தை விட 2021 மே மாதத்தில் எரிபொருள் பயன்பாடு 1.5 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

வங்கிக் கணக்கில் மொபைல் நம்பரை மாற்றுவது ஈசி!
பெட்ரோல் விற்பனையைப் பொறுத்தவரையில் 12.4 சதவீத வளர்ச்சியுடன் 1.99 மில்லியன் டன் அளவு விற்பனையாகியுள்ளது. எனினும் ஏப்ரல் மாதத்தை விட 17 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல, டீசல் விற்பனை 0.7 சதவீத உயர்வுடன் 5.53 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. 2021 ஏப்ரல் மாதத்தை விட டீசல் விற்பனையில் 17 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமலில் இருப்பதால் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாலும் ஜூன் மாதத்திலும் எரிபொருள் தேவை மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்