ஆப்நகரம்

பெட்ரோல் விற்பனை மீண்டும் உயர்வு!

கொரோனாவால் வீழ்ச்சியடைந்த பெட்ரோல் - டீசல் விற்பனை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 18 May 2020, 9:14 pm
கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் தொழில் நடவடிக்கைகளும் போக்குவரத்துச் சேவைகளும் முடங்கியதால் எரிபொருளுக்கான தேவை சரிந்தது. சமையல் எரிவாயு தவிர அனைத்து பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவையும் குறைந்ததால் சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் நுகர்வு 46 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதாவது 2019 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு 18.32 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2020 ஏப்ரல் மாதத்தில் இதன் அளவு 9.92 மில்லியன் டன்னாகக் குறைந்தது. 2020 மார்ச் மாதத்தில் எரிபொருள் பயன்பாடு 16.08 மில்லியன் டன்னாக இருந்தது.
Samayam Tamil petrol


ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. சில துறைகளில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி கிடைத்தது. இதனால் ஏப்ரல் மாத இறுதியில் எரிபொருள் பயன்பாடு சற்று அதிகரித்து, மே மாதத்தில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. நடப்பு மே மாதத்தின் இரண்டு வாரங்களில் பெட்ரோல் - டீசல் பயன்பாடு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. டீசல் பயன்பாடு 75 சதவீதம் உயர்ந்து 1.93 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. பெட்ரோல் விற்பனை 72 சதவீதம் உயர்ந்து 5,75,000 டன்னாக இருக்கிறது.

ஜிஎஸ்டி: மாநிலங்களை இழுத்தடிக்கும் மத்திய அரசு!

விமான எரிபொருள் விற்பனையில் இரு மடங்கு வளர்ச்சி (39,000 டன்) ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்திருந்தாலும், இது 2019 மே மாத அளவை விடக் குறைவுதான். 2019ஆம் ஆண்டின் மே மாதம் 1 முதல் 15ஆம் தேதி வரையில் 1.1 மில்லியன் டன் அளவு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல டீசல் விற்பனை அளவு 3.1 மில்லியன் டன்னாக இருந்தது. விமான எரிபொருள் விற்பனை 87.5 சதவீத உயர்வுடன் 3,10,000 டன்னாக இருந்தது. மே 18ஆம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மே மாதத்தின் எஞ்சிய நாட்களில் பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்