ஆப்நகரம்

எரிபொருள் பயன்பாடு... மீண்டு வந்த இந்தியா!

இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு பல மாதங்களுக்குப் பிறகு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Samayam Tamil 13 Nov 2020, 9:22 pm
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தொழில் நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டன. இதனால், பெட்ரோல், டீசல் நுகர்வில் பாதிப்பு ஏற்பட்டது. ஊரடங்கு தளர்ந்து இயல்பு நிலை திரும்பினாலும் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்ட முடியவில்லை. பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு தொடர்ந்து அனைத்து மாதங்களிலும் எரிபொருள் நுகர்வில் வீழ்ச்சி தொடர்ந்து வந்த நிலையில், முதல் முறையாக அக்டோபர் மாதத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil fuel demand


அக்டோபர் மாதத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை 2.5 சதவீதம் வளர்ச்சி கண்டு 17.77 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. 2019ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இதன் அளவு 17.34 மில்லியன் டன்னாக இருந்ததாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில்தான் பெட்ரோலியம் விற்பனை கொரோனாவுக்கு முந்தையை நிலையை எட்டியது. அதேபோல, அக்டோபர் மாதத்தில் டீசல் விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. டீசலுக்கான தேவை 7.4 சதவீதம் உயர்ந்து 6.5 மில்லியன் டன்னாக இருந்துள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி!

பெட்ரோல் விற்பனையைப் பொறுத்தவரையில், 4.5 சதவீத வளர்ச்சியுடன் 2.54 மில்லியன் டன் அளவிலான பெட்ரோல் அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டீசல் விற்பனையில் அக்டோபர் மாதத்தில்தான் இந்த ஆண்டின் மிகப் பெரிய வளர்ச்சி பதிவாகியுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு திடீரென்று 49 சதவீதம் வீழ்ச்சியடைந்து அதிர்ச்சியளித்தது. 69 நாட்களுக்கு ஊரடங்கு நீடித்ததால் பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாட்டிலும் மந்தநிலை காணப்பட்டது. எனினும் அக்டோபர் மாதத்தில் கொரோனா பாதிப்புகளையும் தாண்டி மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கொரோனா ப

அடுத்த செய்தி

டிரெண்டிங்