ஆப்நகரம்

60 வயசுக்கு ரூ.60,000 கோடி நன்கொடை.. அதானி கொடுத்த சர்பிரைஸ்!

தனது 60ஆவது பிறந்தநாளுக்கு 60,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்படும் என தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Jun 2022, 11:01 am
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், அதானி குழுமத்தின் தலைவருமான கவுதம் அதானி இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சமூக பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கவுள்ளதாக கவுதம் அதானி உறுதியளித்துள்ளார்.
Samayam Tamil Gautam Adani


இந்த நன்கொடைத் தொகையை அதானி ஃபவுண்டேஷன் நிர்வகிக்கும் எனவும், மருத்துவம், கல்வி, திறன் பயிற்சி போன்றவற்றுக்கான நன்கொடைத் தொகை பயன்படுத்தப்படும் எனவும் கவுதம் அதானி Bloomberg ஊடகத்திடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.

இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் இதுவொரு மிகப்பெரிய நன்கொடைத் தொகை எனவும் அதானி தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் பிரபல முதலீட்டாளருமான வாரன் பஃபெட் ஆகியோர் பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

Rashmika Mandanna: பியூட்டி பிராண்ட்.. ராஷ்மிகா மந்தனாவின் கியூட் முதலீடு!
இவர்கள் வரிசையில் தற்போது கவுதம் அதானியும் நன்கொடை வழங்கியுள்ளார். கவுதம் அதானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மட்டுமல்லாமல் ஆசியாவிலும் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு 9200 கோடி டாலர்.

இந்த ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 15 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதில் தற்போது 60,000 கோடி ரூபாயை (7.7 பில்லியன் டாலர்) அதானி நன்கொடையாக செலுத்துவதாக உறுதியளித்துள்ளார். மருத்துவம், கல்வி, திறன் பயிற்சிக்கு நன்கொடை நிதியை பிரித்து வழங்க நிபுணர் குழு அமைக்கப்படும் எனவும் அதானி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்