ஆப்நகரம்

Adani NDTV: மாப்ள இவருதாங்க.. ஆனா அவரு போட்ருக்க சட்ட என்னுதுங்க.. அதானியின் அலப்பறைகள்!!

கௌதம் அதானி NDTV இன் பொறுப்புக்களை மட்டும் ஏற்றுக்கொள்ளும் வணிகத்தை அல்ல எனக் கூறியுள்ளார்.

Samayam Tamil 26 Nov 2022, 7:14 pm
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் பிரபல ஊடக நிறுவனமான என்டிடிவி (NDTV) நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதாக அதானி குழுமம் ஆகஸ்ட் 23ஆம் தேதி அறிவித்தது. இதன்படி, என்டிடிவி நிறுவனத்தில் 29.18% பங்குகளை வாங்குவதாகவும், ஓப்பன் ஆஃபர் வாயிலாக 26% பங்குகளை வாங்க இருப்பதாகவும் அதானி குழுமம் அறிவித்திருந்தது. அதன்படி என்டிடிவி நிறுவனத்தில் 55% மேற்பட்ட பங்குகளை வாங்கி நிர்வாகக் கட்டுப்பாட்டை கைப்பற்ற அதானி குழுமம் முடிவும் செய்திருந்தது, ஆனால் இன்னும் முடிவிற்கு வரவில்லை.
Samayam Tamil Adani NDTV


இச்செய்திகளின்படி அதானி நிறுவனம் 55% பங்குகளை வாங்கிவிட்டால் என்டிடிவி நிர்வாகம் மொத்தமும் அதானி கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்பதுதான் நிதர்சமான உண்மை.

சமீபத்தில் Financial Times ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் NDTV வாங்குவது தனக்கு "வணிக வாய்ப்பு" என்பதை விட ஒரு "பொறுப்பு" என்று அதானி அவர்கள் கூறியுள்ளார். மேலும் NDTV உரிமையாளர் மற்றும் நிறுவனரான பிரணாய் ராயை அதன் தலைவராக இருக்கவும் அதானி அழைத்துள்ளார்.

முன்னதாக, அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கை " என்டிடிவி நிறுவனர்களின் உள்ளீடு, உரையாடல் மற்றும் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தப்பட்டது" என்று என்டிடிவி கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு ஊடக நிறுவனத்தை வாங்குவது சமீபத்தில் பல விவாதங்களையும், சலசலப்புகளையும் நாட்டில் உண்டாக்கியுள்ளது. ஏனெனில் நாட்டின் ஆளும் அரசின் முழு ஒத்துழைப்பும் அதானிக்கு உள்ளதாகவும், அவர் ஊடக நிறுவனத்தை வாங்கினால், அது ஊடகத்தின் சுதந்திரத்தை பறிப்பதாக அர்த்தம் எனக் பரவலாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்தி ஊடகத்திடம் பேசிய அதானி "ஊடகம் அரசு தவறு செய்தால் தவறு என்று சொல்கிறீர்கள், அரசு தினமுமா தவறு செய்யும், அரசாங்கம் நல்லது செய்யவில்லையா எனக் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்