ஆப்நகரம்

பொருளாதார மந்தநிலை: மீளாத் துயரில் இந்தியா!

2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

Samayam Tamil 9 Dec 2019, 7:07 pm
கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. குறிப்பாக 2019-20 நிதியாண்டு தொடங்கியது முதலே பொருளாதார வளர்ச்சி பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி, அதைத் தொடர்ந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மிக மோசமாக 4.5 சதவீதமாகச் சரிந்தது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் மிக மோசமான வளர்ச்சியாகும். அக்டோபர் - டிசம்பர் காலாண்டிலும் மந்தமான வளர்ச்சியே இருக்கும் என்று பல்வேறு மதிப்பீடுகள் கூறிவருகின்றன.
Samayam Tamil மீளாத் துயரில் இந்தியப் பொருளாதாரம்


2019-20 நிதியாண்டில் 5 சதவீத வளர்ச்சியைக் கூட இந்தியா கொண்டிருக்காது என்று உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், எஸ்.பி.ஐ. ரிசர்ச் உள்ளிட்ட உள்நாட்டு ஆய்வு நிறுவனங்களும் மதிப்பிட்டுள்ளன. இதுபோன்ற சூழலில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

9 மாதங்களுக்குப் பிறகு உற்பத்தியை உயர்த்திய மாருதி சுஸுகி!

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று ஐ.ஹெச்.எஸ். மார்க்கிட் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. வங்கித் துறையில் வாராக் கடன் பிரச்சினைகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் நெருக்கடி போன்றவற்றால் கடனுதவிகள் போதிய அளவில் வழங்கப்படாது என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உற்பத்தியைப் பெருக்க வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகளை இந்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், முதலீட்டு அளவை அதிகப்படுத்த வேண்டும் எனவும் இந்த ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜானா காலி... பள்ளிக்கூட நிதியில் கை வைக்கும் மத்திய அரசு?

சாலைகள், ரயில்வே திட்டங்கள், மலிவு விலை வீட்டு வசதித் திட்டம், மருத்துவமனை வசதி போன்ற உள்கட்டுமானத் திட்டங்களில் அரசு அதிகம் செலவிட வேண்டும் எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்