ஆப்நகரம்

கார் வாங்க சூப்பர் வாய்ப்பு... அட்டகாசமான சலுகைகள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு 100 சதவீத நிதியுதவி வழங்கும் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Aug 2021, 5:53 pm
நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சத்தால் பொதுமக்கள் முடிந்த வரையில் பொதுப் போக்குவரத்தைத் தவிர்க்கின்றனர். சமூக இடைவெளி போன்ற காரணங்களுக்காக பைக், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலேயே பயணிக்க விரும்புகின்றனர். கார் இல்லாதவர்கள் புதிதாக கார் வாங்கத் திட்டமிடுகின்றனர். ஆனால் இந்த நெருக்கடியான சமயத்தில் பெரிய தொகை கொடுத்து கார் வாங்குவது கடினமான ஒன்றுதான். எனவே கார் வாங்க ஏதேனும் சிறப்புச் சலுகைகள் கிடைக்குமா என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.
Samayam Tamil tata


அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதற்காக சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களை 100 சதவீத நிதியுதவியில் வாங்கலாம். இதற்காக வாங்கும் கடனை வாடிக்கையாளர்கள் 6 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்காகவே மற்றொரு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்... நீங்களும் ஈசியா கணக்கு தொடங்கலாம்!
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சலுகை வழங்கப்படுகிறது. அதாவது இத்திட்டத்தில் வாங்கும் கடனை விவசாயிகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை திருப்பிச் செலுத்தலாம். அறுவடை காலத்தை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்குப் பின்னர் விவசாயிகள் கையில் பணம் இருக்கும் என்பதால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கடனைத் திருப்பிச் செலுத்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்