ஆப்நகரம்

கை நிறைய பென்சன்.. கடைசி காலத்தில் கவலையே இல்லை!

வெறும் 2 ரூபாய் முதலீட்டில் மிகப் பெரிய லாபம்!

Samayam Tamil 20 Jun 2022, 1:22 pm
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் உங்களுக்கு 3,000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.
Samayam Tamil get 3000 rupees monthly pension with this central govt scheme pradhan mantri shram yogi maandhan yojana
கை நிறைய பென்சன்.. கடைசி காலத்தில் கவலையே இல்லை!


பென்சன்!

இந்த இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம்; கை நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் கடைசிக் காலத்தில் வேலையும் பணமும் இல்லாத போது மிகவும் சிரமமாக இருக்கும். அப்போது வேறு யாராவது உங்களைப் பார்த்துக்கொள்ள மாட்டார்களா என்று பார்ப்பதை விட, நீங்களே உங்களைப் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு பென்சன் செய்ய உதவியாக இருக்கும்.

மத்திய அரசின் திட்டம்!

பிரதான் மந்திரி ஷ்ரம் யோனி மாந்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இதுவொரு சிறந்த திட்டம் ஆகும். சாலையோர கடைக்காரர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், கட்டுமானப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறலாம். இது அரசின் உத்தரவாதமான பென்சன் திட்டமாகும்.

55 ரூபாய் போதும்!

இந்தத் திட்டத்தில் நீங்கள் மாதத்துக்கு 55 ரூபாய் முதலீடு செய்தால் போதும். அதாவது ஒரு நாளைக்கு 2 ரூபாய் மட்டுமே. உங்களுடைய 18 வயதில் இவ்வாறு சேமிக்கத் தொடங்கினால் உங்களுக்கு ஆண்டுக்கு 36,000 ரூபாய் பென்சன் கிடைக்கும். ஒருவேளை 40 வயதில் இந்தத் திட்டத்தில் நீங்கள் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

பென்சன் எவ்வளவு?

உங்களுடைய 60 வயதுக்குப் பிறகு பென்சன் வரத் தொடங்கும். ஆண்டுக்கு 36,000 ரூபாய் பென்சன் என்றால் ஒரு மாதத்துக்கு 3000 ரூபாய். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம். பொதுச் சேவை மையங்களிலேயே இத்திட்டத்தில் இணைவதற்கான வசதி உள்ளது. ஆதார் கார்டு முக்கியம். வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்