ஆப்நகரம்

ஆட்டோ வாங்க ரூ.5 லட்சம் கடன்... சூப்பர் சான்ஸ்!

மத்திய அரசின் வேலை உருவாக்கத் திட்டத்தின் கீழ் ஆட்டோ வாங்கக் கடன் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

Samayam Tamil 20 Oct 2020, 4:39 pm
சிறு தொழில் மூலம் சுய வேலை வாய்ப்பை கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் உருவாக்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி ரோஸ்கார் யோஜனா மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய இரண்டையும் இணைத்து 2008ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்ட திட்டம்தான் பிரதமரின் வேலை உருவாக்கத் திட்டம் (PMEGP). இத்திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர், கிராமப்புற/ நகர்ப்புறங்களில் வசிக்கும் வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்து முடிந்த வரை அவர்களது இடத்திலேயே சுய வேலைவாய்ப்பை மத்திய அரசு உருவாக்கித் தருகிறது.
Samayam Tamil auto


இத்திட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்த வாகனம் வாங்க அவர்கள் கடன் வாங்க முடியும். 30 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரையில் தனிநபருக்கான கடனுதவி வழங்கப்படுகிறது. பயணிகள் ஆட்டோ வாங்குவதற்கு இத்திட்டத்தின் கீழ் நீங்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் பயன்கள் குறித்துப் பெரும்பாலானோருக்குத் தெரியாததால் இதில் விண்ணப்பிக்க முடியாமல் போகிறது. இத்திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களும், கிராமப்புற மக்களும் அதிகம் பயன்பெற முடியும்.

44 லட்சம் பேருக்கு பிஎஃப் பணம்... நீங்க எடுத்தீங்களா?

இத்திட்டத்தின் கீழ் ஆட்டோ கடன் பெறுவதற்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம், கொட்டேஷன், திட்ட அறிக்கை, ஆவணங்கள் அவசியம். ஓட்டுநர்களுக்கு பேட்ஜ் அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு http://www.kviconline.gov.in/pmegpeportal/jsp/pmegponline.jsp என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்