ஆப்நகரம்

ரூ.5,000 பென்சன் வேணுமா? அப்ளை பண்றது எப்படி?

ரூ.210 சேமித்தாலே போதும்...

Samayam Tamil 28 Jan 2021, 9:32 am
அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.5,000 பென்சன் வாங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்...
Samayam Tamil get 5000 rs pension every month after retirement with this plan
ரூ.5,000 பென்சன் வேணுமா? அப்ளை பண்றது எப்படி?


பென்சன்!

இந்த இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க ஆயத்தமாக வேண்டும். உங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், உங்களது இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்சன் உதவியாக இருக்கும்.

அடல் பென்சன் யோஜனா!

அடல் பென்சன் யோஜனா திட்டத்தை மோடி அரசு 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெறமுடியும். இத்துடன், குறைந்தபட்ச பென்சன் தொகைக்கான உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

பயன்கள்!

அடல் பென்சன் யோஜனா திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்சன் தருகிறது. பென்சன் வாங்கும் நபர் இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்சன் கிடைக்கும். இருவருமே இறந்துவிட்டால் நாமினிக்கு பணம் கிடைக்கும். இத்திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இத்திட்டத்தில் இணைவது அதிக பலன்களைத் தரும். நீங்கள் மாதம் ரூ.210 முதலீடு செய்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் ரூ.5,000 பென்சன் வாங்க முடியும்.

எப்படி இணைவது?

18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெறலாம். அனைத்து தேசிய வங்கிகளும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. எனவே, உங்கள் வங்கிக் கணக்கு உள்ள வங்கியைப் பார்வையிட்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கான படிவங்கள் ஆன்லைனிலும், வங்கிக் கிளைகளிலும் கிடைக்கின்றன. நீங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து வங்கியில் சமர்ப்பிக்கலாம். அல்லது வங்கியில் நேரடியாகச் சென்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இத்திட்டத்தில் இணைவதற்கு மொபைல் எண், ஆதார் அட்டை அவசியம். உங்களது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும் மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தல் எஸ்எம்எஸ் வரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்