ஆப்நகரம்

ரூ.5,000 பென்சன் வேணுமா? இது செம சூப்பரான திட்டம்... இதைச் செய்தால் போதும்!

கடைசிக் காலத்தில் உட்கார்ந்தே சாப்பிடலாம்...

Samayam Tamil 20 Mar 2021, 4:51 pm
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் வெறும் 210 ரூபாய் மாதாந்திர முதலீட்டில் 5,000 ரூபாய் வரையில் பென்சன் வாங்க முடியும். அதை எப்படி வாங்குறதுனு இங்கே பாருங்க...
Samayam Tamil get 5000 rs pension with monthly deposit of rs 210 on apy
ரூ.5,000 பென்சன் வேணுமா? இது செம சூப்பரான திட்டம்... இதைச் செய்தால் போதும்!


அடல் பென்சன் யோஜனா!

அடல் பென்சன் யோஜனா திட்டத்தை மத்திய மோடி அரசு 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெறமுடியும். இத்துடன், குறைந்தபட்ச பென்சன் தொகைக்கான உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

அட்டகாசமான பயன்கள்!

அடல் பென்சன் யோஜனா திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்சன் தரும் என்பது முக்கிய அம்சமாகும். பென்சன் வாங்கும் நபர் இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்சன் கிடைக்கும். இருவருமே இறந்துவிட்டால் நாமினிக்கு பணம் கிடைக்கும். இத்திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இத்திட்டத்தில் இணைவது அதிக பலன்களைத் தரும்.

ரூ.5,000 பென்சன் வேணுமா?

உங்களது 60 வயதுக்கு பின்னர் ஓய்வுக் காலத்தில் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெற வேண்டுமெனில் முதலில் நீங்கள் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 18 வயதிலேயே இணைய வேண்டும். அதிலிருந்து 60 வயது வரையில் மாதம் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் ஒருவர் பெயரில் ஒரே ஒரு கணக்கு மட்டுமே துவங்க முடியும். 40 வயது வரையிலான மக்கள் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தின் மூலம் மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாயும், அதிகபட்சமாக 5000 ரூபாயும் பென்சன் கிடைக்கும்.

இணைவது எப்படி?

இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய வங்கிகளும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. எனவே, உங்களது வங்கிக் கணக்கு உள்ள வங்கியிலேயே நீங்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கான படிவங்கள் ஆன்லைனிலும், வங்கிக் கிளைகளிலும் கிடைக்கின்றன. நீங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து வங்கியில் சமர்ப்பிக்கலாம். அல்லது வங்கியில் நேரடியாகச் சென்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். உங்களது மொபைல் எண் மற்றும் ஆதார் கட்டாயம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தும் எஸ்எம்எஸ் வரும். அடல் பென்சன் யோஜனா திட்டத்துக்கு நீங்கள் பதிவுசெய்யும் வயதைப் பொறுத்து பங்களிக்க வேண்டிய தொகை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்