ஆப்நகரம்

லட்சக் கணக்கில் கடன் கிடைக்கும்.. ஆதார் மட்டும் போதும்!

ஆதார், மொபைல் நம்பரை வைத்து 8 லட்சம் வரையில் கடன் வழங்கும் சிறப்புச் சலுகையை பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவித்துள்ளது.

Samayam Tamil 19 Feb 2022, 1:08 pm
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உடனடிக் கடன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்களும் இந்த வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு அவசர காலத்தில் பணம் தேவைப்பட்டால் இனி கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்காகவே சிறப்பு வசதியை பஞ்சாப் நேஷனல் வங்கி கொண்டு வந்துள்ளது.
Samayam Tamil loan


இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.8 லட்சம் வரையில் கடன் வழங்குகிறது. உங்களுக்கும் பணம் தேவைப்பட்டால் இந்த சிறப்பு வசதியின் கீழ் கடன் வாங்கலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் ஆதார் நம்பரை மட்டும் கொடுத்தால் போதும். உங்களுக்கு உடனடியாகக் கடன் கிடைக்கும். இந்தச் சலுகை அனைவருக்கும் பொருந்தாது. அரசு ஊழியர்களுக்கு மட்டுமே. கடன் பெறும் வாடிக்கையாளர் மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவன ஊழியராக இருக்க வேண்டும்.

Gold-Silver Price Today: முரட்டுத் தனமாக உயரும் தங்கம்! பொதுமக்கள் ஷாக்!!

இந்தக் கடன் சில நிமிடங்களில் கிடைத்துவிடும்.வாரத்தின் ஏழு நாட்களும் இச்சலுகை கிடைக்கும். அதிகபட்சமாக 8 லட்சம் வரையில் கடன் வாங்கலாம். இதற்கு செயல்பாட்டுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பாகும். பொதுமக்கள் இப்போது தங்களது அவசர பணத் தேவைகளுக்கும், மற்ற கடன்களை அடைக்கவும் தனிநபர் கடன்களை அதிகமாக வாங்கத் தொடங்கியுள்ளனர். இவை ஆன்லைன் மூலமாக அதிவிரைவாகக் கிடைத்துவிடுகிறது. இதனால் இன்ஸ்டா லோன் எனப்படும் உடனடிக் கடன் வசதி வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்