ஆப்நகரம்

உடனடிக் கடன் ரூ.8 லட்சம்: அரசு வங்கி அறிவிப்பு!

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Samayam Tamil 25 Jan 2022, 1:28 pm
பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் ரூ.8 லட்சம் வரையில் கடன் பெறும் சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil get upto 8 lakh insta loan on punjab national bank
உடனடிக் கடன் ரூ.8 லட்சம்: அரசு வங்கி அறிவிப்பு!


அவசர காலக் கடன்!

பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. திடீரென பண நெருக்கடி ஏற்பட்டாலோ அல்லது வேறு சில காரணங்களுக்கு நிதி தேவைப்பட்டாலோ பஞ்சாப் நேஷனல் பேங்க் அதற்கு உதவுகிறது.

ரூ.8 லட்சம் கிடைக்கும்!

பஞ்சாப் நேஷனல் பேங்க் சிறப்புத் திட்டத்தின் கீழ் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.8 லட்சம் வரையில் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இக்கடனைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் ஆதார் நம்பர் மற்றும் மொபைல் நம்பரைப் பதிவிட்டாலே போதும். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்திலும் பஞ்சாப் நேஷனல் பேங்க் தகவல் வெளியிட்டுள்ளது.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இந்த சிறப்புக் கடன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைத்துவிடாது. அரசுத் துறை அதிகாரிகளுக்கு மட்டுமே இக்கடன் வழங்கப்படுகிறது. அரசு அல்லது பொதுத் துறை நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்குக் கடன் கிடைக்கும். இக்கடனுக்கான ஒப்புதல் சில நிமிடங்களில் கிடைத்துவிடும். இதற்கு செயல்பாட்டு கட்டணம் எதுவும் கிடையாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்