ஆப்நகரம்

ரக்‌ஷா பந்தன்: சகோதரிக்கு இந்தப் பரிசை கொடுத்துப் பாருங்க!

ஆன்லைன் கிஃப்ட் வவுச்சர் மூலமாக சகோதரிக்கு இப்படியும் நீங்கள் பரிசு கொடுக்கலாம்.

Samayam Tamil 22 Aug 2021, 1:55 pm
இன்று ரக்‌ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சகோதரர்கள் தங்களது அன்பு சகோதரிகளுக்கு விலை உயர்ந்த பரிசுகளை இன்று அள்ளிக் கொடுப்பார்கள். ஆனால், இந்த கொரோனா சமயத்தில் நேரில் பரிசு கொடுப்பது சற்று ஆபத்தான ஒன்றுதான். சமூக இடைவெளி போன்ற காரணங்களுக்காக பொதுவாகவே மக்கள் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். எனவே அதன் வாயிலாகவே சகோதரிக்கும் பரிசு கொடுத்துவிடலாம்.
Samayam Tamil raksha


இதாற்காகவே இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா e-Rupi என்ற பெயரில் சிறப்பு கிஃப்ட் வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது. இதை ஒருவர் மற்றொருவருக்கு பரிசாகக் கொடுக்கலாம். இது முழுக்க முழுக்க பணிமில்லா - தொடர்பில்லா பரிவர்த்தனையாகும். இதனால் பிரச்சினை வராது. பிரீபெய்டு கார்டு போலத்தான் இதுவும். இதற்கு கால வரம்பும் உள்ளது. குறிப்பிட்ட நபரின் பெயரில் இந்த வவுச்சரை பரிசாகக் கொடுக்கலாம்.

வருமான வரி.. உங்களுக்கு பணம் வந்துருச்சா?
இதை அனுப்பும்போது தனிநபர் தகவல் திருட்டு போன்ற பிரச்சினைகளும் ஏற்படாது. முற்றிலும் பாதுகாப்பானது. இந்த வசதியை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2ஆம் தேதிதான் தொடங்கிவைத்தார். யாருக்கு இதை அனுப்ப வேண்டுமோ அவருக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவோ அல்லது QR code மூலமாகவோ இதை அனுப்பலாம். இந்த வவுச்சரை வாங்கும் நபரிடம் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண பீச்சர் போனிலேயே அதை அனுப்ப முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்