ஆப்நகரம்

Glenmark Share: பணமழையில் கிலென்மார்க் - பங்குகளை என்ன செய்யலாம்?

தொடக்க வர்த்தகத்தில் கிலென்மார்க் பார்மா நிறுவனத்தின் பங்கு விலை 7 விழுக்காடு உயர்ந்துள்ளது.

Samayam Tamil 17 Aug 2020, 3:58 pm

இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியபின் கிலென்மார்க் பார்மா நிறுவனத்தின் பங்கு விலை 7 விழுக்காடு அதிகரித்து ரூ.508.5ஆக உயர்ந்தது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கிலென்மார்க் பார்மா நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் இருமடங்கு அதிகரித்து ரூ.254.04ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கிலென்மார்க் பங்கு விலை உயர்ந்துள்ளது.
Samayam Tamil கிலென்மார்க்


கொரோனா சிகிச்சைக்கு கிலென்மார்க் பார்மா தயாரித்த மருந்துக்குதான் இந்திய அரசு முதல் ஒப்புதலை வழங்கியது. வைரஸ் தடுப்பு சக்தி கொண்ட ஃபாபிஃப்ளு மாத்திரையை 400 மில்லிகிராம் அளவில் வெளியிடவுள்ளதாகவும், அதை கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் எனவும் கிலென்மார்க் பார்மா அறிவித்திருந்தது.

இனி வங்கிக்கும் போகத் தேவையில்லை - மினிமம் பேலன்ஸும் வேண்டாம்!

இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும் காலை 10.30 மணியளவில் கிலென்மார்க் பார்மா பங்கு விலை 2.36% உயர்ந்தது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கிலென்மார்க் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,344.78ஆக இருந்துள்ளது. ஃபார்முலேஷன் தொழில் மூலமாக மட்டும் கிலென்மார்க் பார்மா ஜூன் காலாண்டில் ரூ.779.89 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.

இதுகுறித்து கிலென்மார்க் பார்மா நிறுவனத்தின் தலைவர் கிலென் சல்தன்ஹா, “கொரோனா கொள்ளை நோய் பாதிப்பால் எல்லா சந்தைகளிலும் ஜூன் காலாண்டு சவால் மிகுந்ததாகவே இருந்தது. தொழில்சூழல் கடினமாக இருந்தபோதிலும் விற்பனை கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த நிதியாண்டு முழுவதும் இதே வளர்ச்சியை தக்கவைக்க கவனம் செலுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

கிலென்மார்க் பார்மா நிறுவனத்தின் மருந்துகளுக்கு இருக்கும் மவுசு, ஜூன் காலாண்டில் ஏற்பட்ட லாப வளர்ச்சி போன்ற காரணங்களால் கிலென்மார்க் பங்குகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதுபோக, கிலென்மார்க் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்