ஆப்நகரம்

4000 பேருக்கு வேலைவாய்ப்பு.. ஃப்ரஷர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

4000 ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ZS நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 6 May 2022, 12:50 pm
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கும் ஃப்ரஷர்களுக்கு (freshers) அட்டகாசமான வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், 4000 ஃப்ரஷர்களை வேலைக்கு எடுக்க ஒரு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil employees


சர்வதேச நிறுவனமான ZS இந்தியாவில் புதிதாக 4000 ஃப்ரஷர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. முழுக்க முழுக்க 4000 பேரும் ஃப்ரஷர்களாகவே எடுக்கப்படுவார்கள் என்பது வேலை தேடுவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. மேலும், பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் வருகின்றன.

Artificial intelligence, Machine learning, Big data, Cloud technologies, Data Science, Business Analytics உள்ளிட்ட துறைகளில் ZS நிறுவனம் ஃப்ரஷர்களை வேலைக்கு எடுக்கிறது. பல்வேறு துறைகளில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை இந்தியாவில் பணியமர்த்தவுள்ளது ZS நிறுவனம்.

தலைமை பதவி எனக்குதான்.. நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து எலான் மஸ்க் புது கணக்கு!
தற்போது இந்தியாவில் சுமார் 9000 ஊழியர்கள் ZS நிறுவனத்துக்கு வேலை செய்து வருகின்றனர். முந்தைய நிதியாண்டை விட 25% கூடுதல் ஊழியர்களை வேலைக்கு எடுக்கவும் ZS நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இந்திய நிர்வாக முதல்வர் மோகித் சூட் தெரிவித்துள்ளார்.

தற்போது பெங்களூரு, டெல்லி, புனே ஆகிய மூன்று இடங்களில் ZS நிறுவனம் இயங்கி வருகிறது. இம்மூன்று பகுதிகளிலுமே புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த ZS நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்