ஆப்நகரம்

சுற்றுலா: வெளிநாடு வேண்டாம்.. கோவா போதும்!

இந்த ஆண்டில் இந்தியர்களின் விருப்பமான சுற்றுலா தலமாக கோவா இருக்குமென்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

Samayam Tamil 17 Jan 2022, 9:56 am
தங்கும் அறைகளுக்கான சேவை வழங்கிவரும் ஓயோ நிறுவனம் சுற்றுலா தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை இந்தியர்கள் விரும்ப மாட்டார்கள் எனவும், அதற்குப் பதிலாக இந்தியாவிலேயே உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிகமாகச் செல்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் கோவாதான் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மணாலிக்கு நிறையப் பேர் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வார்கள் என்று ஓலா ஆய்வறிக்கை கூறுகிறது.
Samayam Tamil goa


ஓயோ வாடிக்கையாளர்கள் சுமார் 3000 பேரிடம் சென்ற டிசம்பர் மாதம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 61 சதவீதத்தினர் உள்நாட்டு சுற்றுலாப் பயணங்களை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். எனினும் 2 சதவீதத்தினர் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். கொரோனா - ஒமைக்ரான் பிரச்சினைகள் இருப்பதால் வெளிநாட்டுப் பயணங்களை பெரும்பாலானோர் தவிர்த்துள்ளனர். உள்நாட்டு சுற்றுலா பயணங்களும் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.

PF பணம்.. இரண்டு முறை எடுக்கலாம்... எப்படி அப்ளை செய்வது?
சுற்றுலா செல்வோருக்கு பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான அச்சம் இருப்பதாகவும், தடுப்பூசி போட்டபின் பயணம் செய்வது பாதுகாப்பைத் தரும் எனவும் 80 சதவீதத்தினர் இந்த ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணங்களைப் பொறுத்தவரையில், மாலத்தீவுகள், பாரிஸ், பாலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட இடங்கள் முன்னிலையில் உள்ளன. துபாய், சிம்லா கேரளா, மனாலி போன்ற இடங்களையும் பெரும்பாலான இந்தியர்கள் அதிகமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சுற்றுலாப் பயணம் செல்லும்போது 37 சதவீதத்தினர் கணவன்/மனைவியுடன் செய்ய வேண்டும், எனவும், 19 சதவீதத்தினர் நண்பர்களுடன் செல்ல வேண்டும் எனவும், 12 சதவீதத்தினர் குடும்பத்தினருடன் செல்ல வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்