ஆப்நகரம்

தங்க பத்திர விற்பனை தொடக்கம்... வாங்கி வச்சா லாபம்!

ஆன்லைனில் வாங்கினால் 50 ரூபாய் சலுகை!

Samayam Tamil 13 May 2021, 7:16 pm
தங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்குவதற்கான அடுத்த கட்ட அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
Samayam Tamil gold bond open for subscription know how to invest in sovereign gold bonds
தங்க பத்திர விற்பனை தொடக்கம்... வாங்கி வச்சா லாபம்!


தங்க முதலீட்டுப் பத்திரம்!

Sovereign gold bond scheme எனப்படும் மத்திய அரசின் தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றன. இத்திட்டத்தில், தங்கத்திற்கான விலை முன்னதாகவே நிர்ணயிக்கப்படும். கூடுதலாக செய்கூலி, சேதாரம் என எதுவும் கிடையாது. எனவே இப்பத்திரங்களில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி வாயிலாக அதிக வருமானம் ஈட்டிக்கொள்ளலாம்.

இதுல இவ்ளோ பயன் இருக்கா?

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் விலை உயர உயர வட்டி வாயிலாக அதிக லாபமும் உங்களுக்குக் கிடைக்கும். தங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்கி எட்டு ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். எட்டு ஆண்டுகள் முடிந்த பின்னர் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை. எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது என்றாலும், அவசரத் தேவை ஏற்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பத்திரத்தை விற்று பணத்தை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அச்சமயத்தில் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.

எப்போது வாங்கலாம்?

தங்க முதலீட்டுப் பத்திரங்களுக்கான விற்பனை அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 17ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நீங்கள் பத்திரங்களை வாங்க முடியும். 2021-22 நிதியாண்டுக்கான முதல் விற்பனை இதுவாகும். மொத்தம் 6 பிரிவுகளாக செப்டம்பர் மாதம் வரையில் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். ஆன்லைன் மூலமாகவும் பத்திரங்களை வாங்கலாம். ஆன்லைன் மூலமாக நீங்கள் வாங்கினால் கிராமுக்கு 50 ரூபாய் சலுகை வழங்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்