ஆப்நகரம்

தங்கம் விலை உயர்வு: குறையும் பயன்பாடு!

விலையேற்றத்தால் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் தங்கத்துக்கான தேவை 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Samayam Tamil 31 Oct 2020, 3:04 pm
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குக் கடுமையான நிதி நெருக்கடி நிலவியதால் தங்கம் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களுக்கான செலவுகளைக் குறைத்தனர். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவிட்டு வந்ததாலும் ஊரடங்கால் நகைக் கடைகள் இழுத்து மூடப்பட்டதாலும் தங்கம் விற்பனை முடங்கியது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பினாலும் தங்கத்துக்கான தேவை மந்தமாகவே இருக்கிறது. அதோடு தங்கம் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தங்கத்துக்கான தேவை குறைந்துள்ளது.
Samayam Tamil gold demand


உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்ற ஜூலை செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 30 சதவீதம் வீழ்ச்சியடைந்து 86.6 டன்னாக இருந்துள்ளது. 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் தங்கத்துக்கான தேவை 123.9 டன்னாக இருந்த நிலையில் இந்த ஆண்டில் கொரோனா பாதிப்பால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நகைகளுக்கான தேவையிலும் 48.8 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டின் ஜூலை செட்பம்பர் காலாண்டில் நகை பயன்பாடு 52.8 டன்னாக இருந்துள்ளது. மதிப்பு அடிப்படையில் பார்த்தால் நகைகளுக்கான தேவை 29 சதவீதம் குறைந்து ரூ.24,100 கோடியாக இருந்துள்ளது.

வாக்காளர் அட்டை: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தங்கத்துக்கான முதலீட்டைப் பொறுத்தவரையில், மேற்கூறிய காலகட்டத்தில் மதிப்பு அடிப்படையில் ரூ.15,410 கோடியாகவும், அளவு அடிப்படையில் 33.8 டன்னாகவும் இருந்ததாக உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநரான சோமசுந்தரம் கூறியுள்ளார். முதலீட்டில் 52 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் தங்கத்துக்கான தேவை வீழ்ச்சியடைந்துள்ளது. 19 சதவீத வீழ்ச்சியுடன் 892 டன்னாக மட்டுமே இருந்திருக்கிறது. 2009ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குப் பிறகு இப்போதுதான் தங்கம் நுகர்வில் இவ்வளவு பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்