ஆப்நகரம்

கொரோனாவால் மங்கிப்போன தங்கம் இறக்குமதி!

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி முப்பது ஆண்டு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

Samayam Tamil 5 May 2020, 7:28 pm
சர்வதேச அளவில் தங்கம் நுகர்வில் இரண்டாவது மிகப் பெரிய நாடாக உள்ள இந்தியாவில் நகை உற்பத்திக்காகவே பெரும்பாலான தங்கம் பயன்படுத்தப்படுகிறது. மார்ச் மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியவுடன் ஆடம்பரப் பொருட்களுக்கான செலவுகளை இந்தியர்கள் குறைக்கத் தொடங்கினர். வாகனம், நகை மீதான மோகம் குறையத் தொடங்கியது. மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டவுடன், நாடு முழுவதும் மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்க நேர்ந்தது.
Samayam Tamil gold import


நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு நகை விற்பனை நின்று போனது. வெளிநாட்டு விமானங்களுக்கும், கப்பல் போக்குவரத்துக்கும் இந்தியாவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் இந்தியாவின் தங்கம் விற்பனை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தியா மொத்தம் 50 கிலோ தங்கத்தை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. 2019 ஏப்ரல் மாதத்தில் இந்தியா 110.18 டன் அளவு தங்கத்தை இறக்குமதி செய்திருந்தது. அதாவது தங்கம் இறக்குமதி ஒரு ஆண்டில் 99.9 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த 30 ஆண்டில் தங்கம் இறக்குமதியில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மாதத்துக்கு நாலு நாள் சம்பளம் கட்: விஸ்தாரா அதிரடி!

மதிப்பு அடிப்படையில், 2.84 மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இந்தியா ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி செய்திருக்கிறது. 2019 ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி மதிப்பு 3.97 மில்லியன் டாலராக இருந்தது. கொரோனா பாதிப்புகள் நீடிக்கும் பட்சத்தில் இந்த முழு ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 350 டன்னாக மட்டுமே இருக்கும் என்று அனைத்திந்திய நகை மற்றும் ரத்தினங்கள் துறை தலைவர் அனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்