ஆப்நகரம்

ஆறாண்டு வீழ்ச்சியில் தங்கம் இறக்குமதி!

மார்ச் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 73 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Samayam Tamil 6 Apr 2020, 8:14 pm
கொரோனா பீதியால் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் தடைக்காலம் உள்ளது. கொரோனா பரவல் அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் அவர்களின் வருமானம் குறைந்துள்ளது. எனவே அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்து மற்ற ஆடம்பரப் பொருட்களுக்கான தேவை மக்களிடையே குறைந்துள்ளது. குறிப்பாக தங்கம் மீதான மக்களின் மோகமும், தங்கம் மீதான முதலீடுகளும் கடந்த ஒரு மாதத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது. தங்கம் விலையேற்றம் காரணமாகவும் மக்களிடையே தங்கத்துக்கான தேவை குறைந்தது.
Samayam Tamil ஆறாண்டு வீழ்ச்சியில் தங்கம் இறக்குமதி


இதுபோன்ற காரணங்களால் மார்ச் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய தங்கம் இறக்குமதியாளராக உள்ள இந்தியா, இந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 25 டன் தங்கத்தை மட்டுமே இறக்குமதி செய்திருக்கிறது. 2019 மார்ச் மாதத்தில் 93.24 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்திருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது.

கொரோனா நிவாரணம்: ரூ.59 கோடி வழங்கிய துறைமுகங்கள்!

மதிப்பு அடிப்படையில், மார்ச் மாதத்தில் 63 சதவீத வீழ்ச்சியுடன் 1.22 பில்லியன் டாலர் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்த ஏப்ரல் மாதத்திலும் தங்கம் விற்பனை முடங்கியுள்ளதால் இந்தியாவின் தங்கம் இறக்குமதி இன்னும் அதிகமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு தடைக் காலம் நீங்கி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினால்தான் தங்கத்துக்கான தேவை அதிகரித்து, விற்பனையும் இறக்குமதியும் அதிகரிக்கும் என்று சந்தை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தங்கம் விலையைப் பொறுத்தவரையில், சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.4,248 ஆக இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்