ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... அகவிலைப்படி 31% ஆக உயர்வு!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 21 Oct 2021, 9:42 pm
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அது எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், சென்ற ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதில் 28 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil ola


மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக தங்களது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வந்தன. இந்நிலையில் மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது தற்போது நடைமுறையில் உள்ள 28 சதவீத அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசு இன்று (அக்டோபர் 21) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.9,488.70 கோடி வரையில் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!
இந்த அகவிலைப்படி உயர்வானது 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ரூ.5,580 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயில் 31 சதவீதம்)

அரசு ஊழியர்களுக்கான சம்பளம் (லெவல் 1) ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையில் இருக்கிறது. இதில் 17 சதவீத அகவிலைப்படி கணக்கிட்டால் ரூ.3,060. அதேபோல, 28 சதவீத அகவிலைப்படி வைத்து கணக்கிட்டால் ரூ.5,040. தற்போதைய அறிவிப்பின்படி 31 சதவீத அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு அரசு ஊழியர்களுக்கு ரூ.5,580 கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்