ஆப்நகரம்

LIC பாலிசிதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கொரோனா காலத்தில் உதவி!

கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு பாலிசிதாரர்களுக்கு புதிய சலுகைகளை எல்.ஐ.சி. நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 May 2021, 6:37 pm
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அலுவலகம், வங்கி போன்ற இடங்களுக்குக் கூட போகமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு எல்.ஐ.சி. நிறுவனம் தனது பாலிசிதாரர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, இறப்புக்கான தொகையை வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil lic


எல்.ஐ.சி. பாலிசிதாரர் மருத்துவமனையில் இறந்துவிட்டால் அதற்கான முனிசிபல் இறக்குச் சான்றிதழை வழங்க வேண்டும். அப்போதுதான் அதற்கு காப்பீடு கிடைக்கும். ஆனால், இப்போது கொரோனா ஊரடங்கால் இந்தச் சான்றிதழை வாங்குவது மற்றும் சமர்ப்பிப்பதில் சிரமம் இருப்பதைக் கருத்தில் கொண்டு இறப்புக்கான ஏதேனும் ஒரு சான்றிதழை வழங்கினாலே போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலிசிதாரருக்கான காப்பீட்டுத் தொகை விரைந்து கிடைக்கும். அந்த பாலிசியை செயல்படுத்தி பணம் வழங்குவதற்கான பணியும் விரைந்து நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா? உடனே இதைப் பண்ணுங்க!
இறப்புச் சான்றிதழ், மருத்துவமனை டிஸ்சார்ஜ் படிவம், மருத்துவமனைகளால் வழங்கப்பட்ட இறப்பு தொடர்பான சான்றிதழ்கள், எல்.ஐ.சி. கிளாஸ் 1 அதிகாரிகளின் கையொப்பம் போன்றவை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆயுள் சான்றிதழை மின்னஞ்சல் மூலமாகவோ மற்ற ஆன்லைன் வழித்தடங்களிலோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் சென்று சமர்ப்பிப்பதில் சிக்கல் இருப்பதால் இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்