ஆப்நகரம்

சுந்தர் பிச்சையே சொல்லிட்டாராம்.. கூகுள் ஆட்குறைப்புக்கு காரணம் இதுதான்!

கூகுள் ஆட்குறைப்பு செய்வதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவித்த சுந்தர் பிச்சை.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 22 Jan 2023, 4:00 pm
சர்வதேச அளவில் தொழில்நுட்ப துறையில் கூகுள் (Google) மிகப்பெரிய ஜாம்பவானாக உள்ளது. குறிப்பாக இண்டர்நெட்டில் கூகுள் நிறுவனத்தின் பங்கு மிகப்பெரியது. சர்வதேச அளவில் கூகுள் நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
Samayam Tamil sundar pichai
sundar pichai


இந்நிலையில், உலகளவில் சுமார் 12000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஜனவரி 20ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர், அவர்களுக்கான இழப்பீடு பற்றிய அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் இமெயில் வழியாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆட்குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை. ஆட்குறைப்பு நேர்ந்ததற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Google Layoffs: 12000 ஊழியர்கள் பணிநீக்கம்.. கூகுள் திடீர் ஆட்குறைப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் அதீத வளர்ச்சியை அடைந்தது. இதை சமாளிப்பதற்காக கூகுள் நிறுவனம் ஏராளமான ஊழியர்களை பணியில் அமர்த்தியது. ஆனால், தற்போதைய பொருளாதார சூழலை அப்போது எதிர்பார்க்கவில்லை என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னுரிமைகளை எட்டுவதற்காக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது பெரிய பெரிய நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. முதலீடுகள் குறைந்ததை சமாளிப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் செலவுகளை குறைக்க ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன.

ஏற்கெனவே அமேசான், ஃபேஸ்புக், ட்விட்டர், நெட்ஃபிக்ஸ் என பல்வேறு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இதுபோக நடுத்தர நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என இன்னும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. இந்தியாவிலும் ஆட்குறைப்பு சுனாமி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்