ஆப்நகரம்

இரவோடு இரவாக.. 450 இந்திய கூகுள் ஊழியர்கள் பணிநீக்கம்.. என்னதான் நடக்குது!

கூகுள் நிறுவனம் தொடர் பணிநீக்கத்தின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் 450 ஊழியர்களை மீண்டும் பணிநீக்கம் செய்துள்ளது.

Samayam Tamil 18 Feb 2023, 12:40 pm
கோவிட்-19 காலங்களில் கொடிகட்டிப் பறந்த ஐடி நிறுவனங்கள் தற்சமயம் அதன் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
Samayam Tamil Google Layoff


அதிலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கி ஐடி துறையில் ஜாம்பவான்களாக விளங்கும் விப்ரோ, இன்ஃபோசிஸ், கூகுள் நிறுவனங்களும் அதன் நீண்டகால பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது சோகம் அளிக்கும் செய்தியாக உள்ளது.

தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான கூகுள் சமீபத்தில் உலக அளவில் 12,000 ஊழியர்களை கடந்த மாதம் பணிநீக்கம் செய்துள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர்பிச்சை தெரிவித்து, அதற்கு வருத்தமும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. அதில் இந்தியாவில் விற்பனை, சந்தைப்படுத்தல், கூட்டாண்மை போன்ற துறைகளில் உள்ள 450 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்பை நிறுவனம் பணிநீக்கத்தின் அறிகுறியாக வழங்கியுள்ளது.

கூகுள் இந்தியாவின் தலைவரான சஞ்சய் குப்தா, கூகுள் இந்தியாவைச் சேர்ந்த 450 ஊழியர்களுக்கு பணிநீக்கம் அறிவிப்பை இ-மெயில் மூலமாக தெரிவித்துள்ளார்.

தொடர் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை காரணமாகவும் பணிநீக்கம் செய்யும் கட்டாயத்தில் நிறுவனம் இருப்பதாவும், இதற்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் சுந்தர் பிச்சை கூறியிருந்தார்.

மேலும் கூகுள் புதிதாக வாங்கிய இந்தியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் சிம்சிமில் எனும் இ-காமர்ஸ் நிறுவனத்தின் 70% ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.

அதேசமயம் கூகுள் ஊழியர்களுக்கு இதுகுறித்த கணிப்பு முன்னதாகவே இருந்ததாகவும், வேலை நீக்கத்தைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவர்களின் நிலையை எடுத்துக் கூறி, வேலைவாய்ப்பு தருமாறும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கேட்டு வருகின்றனர்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்