ஆப்நகரம்

ஏழை மக்களுக்கு விடிவு காலம்.. ஃபிக்சட் டெபாசிட்டு ஆதார் கார்டு போதும்.. பான் கார்டு தேவையில்லை!

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தளர்வுகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 30 Mar 2023, 5:33 pm
சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ் வைப்புத்தொகைக்கான நடைமுறைகளை தளர்த்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் இருந்து அதிக அளவிலான முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த தளர்வுகள் இருக்கும் என்று ET ஆறிக்கை தெரிவித்துள்ளது.
Samayam Tamil Small savings relaxation


KYC தளர்வின் ஒரு பகுதியாக மூன்று நடைமுறை மாற்றங்கள் இருக்கும் என்று அறிக்கைகள் கூறியவை:

1) பான் கார்டுகளுக்குப் பதிலாக ஆதாரைப் பயன்படுத்தி சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்

2) இறந்த முதலீட்டாளரின் வைப்புத் தொகையில் சட்டப்பூர்வ வாரிசுகள் தங்கள் கைகளை வைப்பதற்கான நடைமுறைகளை அரசாங்கம் எளிதாக்கும்

3) நியமன செயல்முறை மேலும் எளிமைப்படுத்தப்படும்.

இந்த தளர்வுகளுக்கான முக்கிய நோக்கமே இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பான் கார்டுகளை விட ஆதார் அட்டைகளை வைத்திருப்பதால் சிறுசேமிப்புத் திட்டங்களைப் பயன்படுத்த பல கிராமப்புற வைப்பாளர்களை பயன்பெற வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான KYC விதிமுறைகளள் ஏழை மக்களுக்கான ஜன்தன் கணக்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டதைப் பிரதிபலிக்கும் என்று அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளது எனவும் அறிக்கைகள் கூறுகின்றன.

மத்திய அரசு NSSF-ல் இருந்து 2023 நிதியாண்டில் 4.39 லட்சம் கோடி ரூபாய்க்கு (திருத்தப்பட்ட மதிப்பீடு) இருந்து, வரும் நிதியாண்டில் 4.71 லட்சம் கோடியாக உயர்த்த பட்ஜெட்டில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்