மத்திய நேரடி வரிகள் வாரியம் ஊழல் உள்ளிட்ட பல தவறான செயல்களில் ஈடுபட்டிருந்ததாக 15 மூத்த அதிகாரிகளை கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது. சென்ற நான்கு மாத காலத்தில் வரித்துறை அதிகாரிகள் இவ்வாறு கட்டயா ஓய்வு அளிக்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்படுவது நான்காவது முறையாகும். அடிப்படை விதி 56(J)-ன் கீழ் நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்கு முன் புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்ற உடனேயே 12 பேர் இவ்வாறு கட்டாய ஓய்வு பெற்றனர். சில நாட்களிலேயே மேலும் 15 பேருக்கு இதே கதி ஏற்பட்டது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாத இறுதியில் 22 மூத்த வருமான வரித்துறை அதிகாரிகள் கட்டாய ஓய்வு மூலம் வேலை இழந்தனர். இதன்படி, 49 பேர் பதவி பறிபோயிருந்த நிலையில் புதிதாக மேலும் 15 பேருக்கு கட்டயாக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
பதற வேண்டாம்! பிஎம்சி வங்கியில் 1000 ரூபாய்க்கு மேலும் பணம் எடுக்கலாம்
ஜூன் முதல் தற்போது வரை கட்டாய ஓய்வு மூலம் வேலை பறிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்திருக்கிறது. இப்போது ஓய்வு கொடுக்கப்பட்டவர்களின் கிட்டதட்ட பாதி பேர் சிபிஐ மூலம் ஊழல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள். ஒருவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டவர். ஒருவர் வருமானக் கணக்கில் வராத சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
“துணிச்சலாக பல அதிகாரிகளுக்கு கட்டயா ஓய்வு கொடுத்துள்ளோம். தவறான நடத்தையை இனியும் சகித்துக்கொள்ள முடியாது” என இது பற்றி அதிகம் அறிந்துள்ள அரசு அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
எஃகு' துறையிலும் உறுதி இல்லை! வளர்ச்சி 5% சதவீதம் குறையுமாம்!
இதற்கு முன் புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்ற உடனேயே 12 பேர் இவ்வாறு கட்டாய ஓய்வு பெற்றனர். சில நாட்களிலேயே மேலும் 15 பேருக்கு இதே கதி ஏற்பட்டது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாத இறுதியில் 22 மூத்த வருமான வரித்துறை அதிகாரிகள் கட்டாய ஓய்வு மூலம் வேலை இழந்தனர். இதன்படி, 49 பேர் பதவி பறிபோயிருந்த நிலையில் புதிதாக மேலும் 15 பேருக்கு கட்டயாக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
பதற வேண்டாம்! பிஎம்சி வங்கியில் 1000 ரூபாய்க்கு மேலும் பணம் எடுக்கலாம்
ஜூன் முதல் தற்போது வரை கட்டாய ஓய்வு மூலம் வேலை பறிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்திருக்கிறது. இப்போது ஓய்வு கொடுக்கப்பட்டவர்களின் கிட்டதட்ட பாதி பேர் சிபிஐ மூலம் ஊழல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள். ஒருவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டவர். ஒருவர் வருமானக் கணக்கில் வராத சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
“துணிச்சலாக பல அதிகாரிகளுக்கு கட்டயா ஓய்வு கொடுத்துள்ளோம். தவறான நடத்தையை இனியும் சகித்துக்கொள்ள முடியாது” என இது பற்றி அதிகம் அறிந்துள்ள அரசு அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
எஃகு' துறையிலும் உறுதி இல்லை! வளர்ச்சி 5% சதவீதம் குறையுமாம்!