ஆப்நகரம்

பணம் எடுப்பவர்கள் விரலில் மை! எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!!

பணம் எடுப்பவர்கள் விரலில் மை! எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!!

TOI Contributor 15 Nov 2016, 2:00 pm
வங்கிகளில் பல முறை பணம் எடுக்க வருபவர்களை அடையாளம் காணும் வகையில் பணம் எடுத்துச்செல்லும் பொதுமக்களின் கை விரலில் மை வைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil government decided to mark indelible ink in finger opponents condemns
பணம் எடுப்பவர்கள் விரலில் மை! எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!!


பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களின் கைகளில் மை வைக்கப்படும் என்றும், அது இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் பொருளாதார செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வங்கிகளில் கூட்ட நெரிசலை குறைக்க முடியும் என்றும், கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் ஆட்களை அனுப்பி பணம் எடுப்பது தடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நவம்பர் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த செயல்பாடு ஏற்கத்தக்கதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்றும் கேட்டுள்ளார். நடுத்தர வர்க்கத்து மக்களை நம்பாமல் இது போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஆபத்தானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் டி.ராஜா, வங்கிக்கு வரும் மக்களின் விரலில் மை வைப்பது என்பது மக்களை அடிமையாக்கும் செயல் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, பொதுமக்களின் விரல்களில் மை வைப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்