ஆப்நகரம்

ஏசி, பிரிட்ஜ் உட்பட 19 பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு!

ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உட்பட 19 பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Sep 2018, 9:50 pm
நடப்புக்கணக்குப் பற்றாக்குறை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு நள்ளிவரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.
Samayam Tamil 9


டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே வருவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடந்தது. அதில் நாட்டின் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க பல ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. 19வகையான பொருட்களுக்கு இறக்குமதி வரியை வருவாய் துறை அதிகரித்துள்ளது.

10 கிலோவுக்கு குறைவாக வீட்டில் பயன்படுத்தப்படும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு 10 சதவீதம் வரிவிதிக்கப்பட்ட நிலையில் 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி, பிரிட்ஜ் ஆகியவற்றுக்கு வரி 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக, ரேடியல் டயர்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

உலோகங்கள் போன்றவற்றுக்கு 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், பிளாஸ்டிக் குளியல் தொட்டி, சிங்க், வாஷ் பேஷின், சமையலறை பொருட்கள், வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள், ஆகியவற்றுக்கு 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்