ஆப்நகரம்

GPF Interest Rate: 0.4 சதவீதம் அதிகரித்து 8 சதவீதமாக நிர்ணயம்!!

ஜெனரல் பிராவிடன்ட் பண்ட்டுக்கான அக்டோபர்-டிசம்பர் மாதங்களுக்கான வட்டியை மத்திய அரசு 0.4 சதவீதம் அதிகரித்து 8 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

Samayam Tamil 16 Oct 2018, 6:23 pm
அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் ஜெனரல் பிராவிடன்ட் பண்ட்டுக்கான அக்டோபர்-டிசம்பர் மாதங்களுக்கான வட்டியை மத்திய அரசு 8 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
Samayam Tamil 0.4 சதவீதம் அதிகரித்து 8 சதவீதமாக நிர்ணயம்!!
0.4 சதவீதம் அதிகரித்து 8 சதவீதமாக நிர்ணயம்!!


இந்த வட்டி விகிதம் நடப்பு நிதிக்கான 2018-2019ஆம் ஆண்டில், ஜூலை-செப்டம்பர் மாதத்தில் 7.6 சதவீதமாக இருந்தது. இதிலிருந்து தற்போது 0.4 சதவீதம் அதிகரித்து 8 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த வட்டி விகிதம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த வட்டி விகிதம் மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே மற்றும் பாதுகாப்புத்துறை ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுசேமிப்பு, பிபிஎப் உள்பட அனைத்து சேமிப்புகள் மீதான வட்டி விகிதம் 0.4 சதவீதம் அக்டோபர்-டிசம்பர் மாதங்களுக்கு உயர்த்தப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கு ஏற்றவாறு தற்போது ஜெனரல் பிராவிடன்ட் பண்ட்டுக்கான வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது.

GPF - PPF வேறுபாடு என்ன?
ஜெனரல் பிராவிடன்ட் பண்ட் என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த நிதியின் மீது தொழிலாளர்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், பிபிஎப் மீது கடன் பெற முடியாது. இதன் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்