ஆப்நகரம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை அரசு விற்கப் போகிறதா? பதில் இதோ...

பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றை விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 13 Mar 2020, 6:50 pm
மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல், கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம் 2016ஆம் ஆண்டில் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்த பிறகு மற்ற நிறுவனங்களுக்குக் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஏர்செல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஐடியா - வோடஃபோன் நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன.
Samayam Tamil பிஎஸ்என்எல் நிறுவனத்தை அரசு விற்கப் போகிறதா பதில் இதோ


நிலைமை இப்படி இருக்க, பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல், தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் இதன் ஊழியர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரையில் கிட்டத்தட்ட 80,000 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, ஊழியர்களுக்கான மாதாந்திர சம்பளத்தையும் கொடுப்பதில் இந்நிறுவனம் தாமதித்து வருகிறது. இந்நிலையில், இவ்விரண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

கார் வாங்க யாரும் இல்லையா? விற்பனை வீழ்ச்சி!

ஆனால், இவற்றின் பங்குகளை விற்பனை செய்து தனியார் மயமாக்கப்போவதாக வதந்திகள் பரவின. ஏனெனில், பொதுவாகவே பொதுத் துறை நிறுவனம் ஒன்று பெருத்த நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தால் வேறு வழியில்லாத பட்சத்தில் அவற்றைத் தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடும். விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா அதற்கு மிகப் பெரிய உதாரணம். எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யப்போவதாகவும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

யெஸ் வங்கியைக் காப்பாற்ற வந்த ஐசிஐசிஐ வங்கி!

எனவே, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சரான சஞ்சய் தாத்ரே மாநிலங்களவையில் இன்று (மார்ச் 13) தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பி மனஸ் ரஞ்சன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இவற்றை விற்பனை செய்யப்போவதில்லை எனவும், 2019 அக்டோபர் மாதத்தில் இந்நிறுவனங்களை மீட்பதற்கான செயல் திட்டத்தை அரசு வகுத்ததாகவும் தெரிவித்தார்.

மேற்கூறிய இரண்டு நிறுவனங்களிலும் விருப்ப ஓய்வின் கீழ் முறையே 78,569 மற்றும் 14,387 ஊழியர்கள் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்