ஆப்நகரம்

சூடுபிடிக்கும் ஏர் இந்தியா விற்பனை!

ஏர் இந்தியா பங்கு விற்பனைக்கான ஏல விண்ணப்பங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 27 Jan 2020, 1:16 pm
மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா, நீண்ட காலமாகவே போதிய அளவில் வருவாய் ஈட்ட முடியாமல் தவித்து வருகிறது. ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமையும் இருப்பதால் ஏர் இந்தியாவால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. தனது ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கூட அதனால் சரியான நேரத்தில் வழங்க முடியாமல் போராடி வருகிறது. இதுபோன்ற சூழலில்தான் 2018ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட அரசு முடிவு செய்தது. 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அறிவிப்பு வெளியான நிலையில், கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க எவரும் முன்வரவில்லை. எனவே ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளையும் விற்பனை செய்ய அரசு முன்வந்தது.
Samayam Tamil சூடுபிடிக்கும் ஏர் இந்தியா விற்பனை


இது தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ஏர் இந்தியா பங்கு விற்பனைக்கான ஏல விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் எனவும், அதற்காக விண்ணப்பிப்பதற்கு மார்ச் 17 கடைசித் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, ஏர் இந்தியாவின் கிளை நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீதப் பங்குகளும், ஏர் இந்தியா சிங்கப்பூர் ஏர்போர்ட் டெர்மினல் சர்வைசஸ் நிறுவனத்தின் 50 சதவீதப் பங்குகளும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை: இப்படி பண்ணுனா எப்படி நகை வாங்குறது?

ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் நிறுவனத்துக்கு அதன் முழு நிர்வாக உரிமையும் ஒப்படைக்கப்படவுள்ளது. ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் அதன் ரூ.23,286.5 கோடி கடன் பாக்கியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், எஞ்சிய கடன் முழுவதும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் இருக்கும் எனவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குபவர்கள் வேண்டுமென்றால் அதன் பிராண்டு பெயரை மாற்றிக்கொள்ளலாம் எனவும், ஏர் இந்தியா விற்பனை செய்யப்பட்ட பிறகு நான்கு ஆண்டுகளுக்கு ஏர் இந்தியாவின் ஊழியர்களின் பணிக்கு எவ்வித பாதிப்பும் வராமல் பாதுகாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பெட்ரோல் விலை: அடடே ஆச்சரியம் - இப்படி குறையும்னு எதிர்பார்க்கல!

நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஏர் இந்தியாவைத் தனியார் மயமாக்காவிட்டால் அதை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்